வீட்டை இழந்த சரிகாவுக்கு உதவும் அமீர்கான் !

0
கமலின் முன்னாள் மனைவியும் சுருதிஹாசன், அக்‌ஷரா ஆகியோரின் தாயுமான சரிகா மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடி யிருப்பில் சொந்த வீடு வாங்கி வசித்து வந்தார்.
வீட்டை இழந்த சரிகாவுக்கு உதவும் அமீர்கான் !
இது சரிகா நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கியது. ஆனால் அது அவரது தாயார் பெயரில் வாங்கப் பட்டு இருந்தது. 2004-ம் ஆண்டு கமலை பிரிந்தார். 

இந்தநிலை யில் கடந்த நவம்பர் மாதம் சரிகா வின் தாயார் மரணம் அடைந்தார். 

அவர் சரிகா வசித்த அடுக்குமாடி குடியிருப்பு உள்பட அவரது பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும், தனது குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவருக்கு உயில் எழுதி வைத்து இருந்தார்.

இதனால், தான் உழைத்து வாங்கிய வீடே தனக்கு இல்லை என்பதை அறிந்த சரிகா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் கோர்ட்டும் வழக்குமாக அலைந்து கொண்டி ருக்கிறார்.
சுருதிஹாசன் மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி வசித்து வருகிறார். அக்‌ஷரா சென்னையில் தந்தை கமலுடன் கொஞ்ச நாளும், மும்பை செல்லும் போது தாயுடனும் தங்கி வருகிறார்.

இந்த நிலையில், சொந்த வீடு இல்லாமல் சரிகா தவிப்பதை அறிந்த அவரது நெருங்கிய தோழியும் அமீர்கானின் சகோதரி யும், 

இம்ரான்கா னின் தாயுமான நுஸ்‌ஷத், சரிகாவுக்கு உதவும்படி அமீர்கானிடம் கூறியுள்ளார். இதை யடுத்து அவர் சரிகாவுக்கு உதவ முன் வந்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings