தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !

0
உலக கட்டடக் கலை நிபுணர் களை யெல்லாம் தலை உயர்த்திப் பார்க்க வைத்து, வியப்பில் ஆழ்த்து கிறது தஞ்சைப் பெரிய கோயில். இதன் சதய விழா, வரும் 29, 30-ம் தேதி களில் நடக்க விருக்கிறது.
தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயிலின் வழி பாட்டு முறைகள் திட்ட மிட்டு மாற்றப் படுவதாக வும், 

கோயில் கட்டு மானங்கள் சிதைக்க ப்படுவதாகவும் அதிர்ச்சி கிளப்பு கிறார்கள் தொன்ம கட்டடக் கலை நிபுணர்கள்.

கோயில் கட்டடக் கலைஞரும் ஆய்வாள ருமான தென்னன் மெய்ம்மன், “தஞ்சைப் பெரிய கோயில், 

பழந்தமிழர்களின் கட்டுமானத் திறனுக்கும், வழிபாட்டு முறை களுக்கும் சான்றாக மிஞ்சி யிருக்கும் அடை யாளம். 

இந்த அடையா ளத்தை அழித்து விட்டால் தமிழர்கள், பெருமை பேச முடியாது என நினைக்கி றார்கள். 

இக்கோயிலை வலு விழக்கச் செய்வ தற்கான வேலைகள் தொடர்ந்து நடக்கி ன்றன. 

2010-ல் பெரிய கோயில் விமான த்தின் மிக அருகில், 350 அடி ஆழத் தில் ஆழ் துளைக் கிணறு தோண்டி யிருக்கி றார்கள். 

1000 ஆண்டு கால உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப் பட்ட ஒரு கோயிலின், 
விமானத் திலிருந்து 100 அடிக்குள் ராட்சத எந்தி ரத்தை வைத்து 350 அடி ஆழத்தில் போர் போடுவது எவ்வளவு விபரீதம்?

ஆழ்துளைக் கிணற்றுக் கான வேலை நடந்த போதே, இங்கிருந்த தொல் பொருள் துறை அதிகாரி சத்யபாமா பத்ரிநாத்திடம் விசாரி த்தோம். 

மழுப்ப லாகப் பதில் சொன்னார். அப்போது தொல் பொருள் துறை இயக்கு நராக இருந்த தயாள னிடம் பேசிய போது, 

‘தஞ்சை பெரிய கோயிலில் ஆழ் துளைக் கிணறு தோண்ட முறைப்படி யாரும் அனுமதி வாங்க வில்லை. 

நீங்கள் தாராள மாக போலீஸில் புகார் செய்ய லாம்’ என்றார். அதன் பிறகு தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக் குழுவினர் நீதிமன்றத் துக்குச் சென் றார்கள். 

அதற்குள் கிணறு தோண்டும் வேலை முடிந்து குழாயை இறக்கி விட்டார்கள். நீதி மன்றம், அந்தக் கிணற்றைப் பயன் படுத்தக் கூடாது என்று உத்தர விட்டது. 

அப்படியே குழாய் இறக்கிய நிலையில் அந்தக் கிணறு இருக் கிறது. இன்னும் மூடப்பட வில்லை.

போர்வெல் போடப் பட்ட போது, கீழே இருந்து தூய மணல் மட்டுமே வெளிப் பட்டது. கோயிலைச் சுற்றி எல்லா இடங் களிலும் சுக்கான் பாறைகள். 
தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !
இங்கு மணல் எப்படி வந்தது என்று ஆய்வு செய்த போது தான், பெரிய கோயிலின் கட்டுமான நுட்பமே புரிந்தது. 

பூமியின் அச்சு சாய் வதைக் கருத்தில் கொண்டு, இயற்கை யாக கோயில் தன்னைத் தகவ மைத்துக் கொள்ளும் வகையில் தலை யாட்டி பொம்மை யின் வடி வமைப்பில் அமைத்தி ருக்கிறா ர்கள். 

பாறைக்கு நடுவில் தொட்டி போன்ற அமைப்பை உருவாக்கி, 350 அடி ஆழத் துக்கு மணலைக் கொட்டி அடித் தளத்தை உருவாக்கி யிருக்கி றார்கள். 

அந்தக் கட்டு மானத் துக்கு மிக அருகில் தான், இப்போது ஆழ்துளைக் கிணறு அமைத்து ள்ளார்கள். இது மட்டு மல்ல... கோயில் கரு வறையை யொட்டி இரட்டைச் சுவர்கள் உண்டு. 

ஒரு சுவரில் ஓவிய ங்களும், இரண் டாவது சுவரில் கரண சிற்பங் களும் உள்ளன. மூன்றாவ தாக ஒரு இடைவெளி இருக்கிறது. இதுவரை யாரும் நுழைந்ததில்லை. 
அதில் நுழைவ தற்கு இப்போது புதிதாக ஒரு பாதையை உருவாக்கு கிறார்கள். பராமரிப்புப் பணிக்காக நுழைவ தென்றால், கயிறு மூலமாக தொழி லாளர்கள் உள்ளே போய் வேலை செய்யலாம். 

ஆனால், சுவரை உடைத்து ஆறு அடி இரும்புக் குழாய் களைச் சொருகி, பலகை போட்டு வசதியாக ஒரு பாதையை அமைக்கி றார்கள். 

அது யாருக்கான பாதை என்பது தான் இப்போதைய கேள்வி. கோயிலின் கட்டு மானத்தைப் 
தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !
பாதிக்கும் வகையில் இப்படி யான வேலை களைச் செய்ய யார் இவர்களுக்கு அனுமதி அளித்தது?

பெரிய கோயிலின் விமானம் என்பது, இருகாற் படையில் தொடங்கி ஒரு காற்படை நுட்பத்தில் கட்டப் பட்டது. 

மேலே செல்லச் செல்ல எடை குறைந்த ஒற்றைக் கல்லைப் பயன் படுத்திக் கட்டியி ருக்கிறார்கள். 

இப்படிச் சுவர்களைச் சிதைக்கும் போது மொத்தக் கட்டு மானமும் ஆட்டம் கண்டு விடும். வழிபாட்டு முறை களையும் மாற்றி யிருக்கி றார்கள். 

ராஜராஜன் காலத்தில் வாராகி சிலை இந்தக் கோயிலில் இல்லை. பிற்கால த்தில் அமைக்கப் பட்ட அந்த அம்மனுக்கு அமாவாசை நாள் களில் இப்போது சண்டி ஹோமம் செய்கி றார்கள்’’ என்றார்.

தஞ்சைப் பெரிய கோயில் தொல்பொருள் துறை பராமரிப் பாளர் சந்திர சேகரிடம் விளக்கம் கேட்டோம். 

“1000 ஆண்டுகள் கடந்து எல்லா இயற்கை சீற்றங் களையும் தாங்கி நிற்கிற இந்தக் கோயி லில், ஆறு அங்குல ஆழ்துளைக் கிணறு தோண்டுவ தால் 

என்ன பாதிப்பு வந்து விடும் எனத் தெரிய வில்லை. கோயிலு க்குள் நீங்கள் சொல்வது போல எந்தக் கட்டுமான வேலையும் நடக்க வில்லை” என்றார்.
தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !
அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். “வாராகி சிலை நெடுங் காலமாக அங்கே இருக்கிறது. 

வழக்க மாக நடக்கிற வழி பாடுகள் மட்டுமே செய்யப் படுகின்றன. காரிய சடங்குகள் எதையும் செய்வ தில்லை. 

முறைப்படி என்னென்ன வழி பாடுகள் உண்டோ, அவை யெல்லாம் முறையாகச் செய்யப் படுகின்றன என்கி றார்கள்.

கோயில் யானை இறந்து சில ஆண்டுகளாகி விட்டன. வேறு யானை வாங்கித் தர பக்தர்கள் தயாராக இருக்கி றார்கள். 

குடமுழுக்கு நடத்தப் பட்டால், அதற்கான நிதியில் சிதை வடைந்த பகுதி களைப் புனரமைப்பு செய்ய முடியும்’’ என்கி றார்கள் பக்தர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings