டெல்டா விவசாயிகளை அல்லாட வைக்கும் ஷேல் கேஸ் !

0
மீத்தேன் என்னும் எமனின் பிடியிலிருந்து தற்போது தான் தற்காலிகமாக மீண்டது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள். 
டெல்டா விவசாயிகளை அல்லாட வைக்கும் ஷேல் கேஸ் !
அதற்குள் அடுத்த பேராபத்து, டெல்டா மாவட்ட மக்களை நெருங்குகிறது. ஆம் டெல்டாவை பாழ்படுத்தும் புதிய திட்டமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளது பாறை எரிவாயு (ஷேல் கேஸ்) திட்டம்.

ஷேல் கேஸ் - டெல்டா மக்களை மிரட்டும் மற்றொரு எமன்

இந்த திட்டத்தினால் டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவன மாவதோடு, சுற்றுச் சூழல் பாதிக்கப் பட்டு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 25 ஆண்டு களாக ஓ.என்.ஜி.சி நிறுவனம், டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. 

காவிரிப் படுகையில் அதிகம் அளவில் காணப்படும் மீத்தேன் வாயுவை எடுக்க, கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 
இதனால் ஏற்படும் பாதிப்பை அறிந்து அனைத்து கட்சியினரும், விவசாயிகளும் ஒன்று திரண்டு, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடினார். 

பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தினர்கள். இதன் விளைவாக மீத்தேன் எடுப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது பசுமை தீர்பாயம்.

மீத்தேன் முயற்சி தற்காலி கமாக முறி யடிக்கப் பட்ட நிலையில், டெல்டா வின் மீது புதிதாக பாறை எரிவாயு என்கிற அம்பு எறியப் பட்டுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 9 இடங்கள் உள்பட இந்தியாவில் 56 இடங்களில் பாறை எரிவாயு எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 

தமிழகத் தில் பாறை எரிவாயு மற்றும் பாறை எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி கேட்டு, சுற்றுச் சூழல் அமைச்ச கத்திற்கு ஓ.என்.ஜி.சி., 29.06.2015 அன்று கடிதம் அனுப்பியது. 
மத்திய அரசும் அனுமதி கொடுப்பதற்கு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது. 

விவசாயி களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு, விவசாயிகளுக்கு பாதமான முடிவினை எடுக்க ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.

பாறை எரிவாயு - அப்படி என்றால்...?

இயற்கை எரிவாயு என்பது மீத்தேன், ஈத்தேன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, புளூட்டேன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் வாயுக்கள் கலந்த கலவையாகும்.
ஷேல் என்பது பல அடுக்கு களை கொண்ட மென்மை யான கற்கள் அல்லது எளிதில் பிளவு படக்கூடிய கற்கள். பூமியி லிருந்து 10,000 அடி ஆழத்தில் இந்த கற்கள் காணப் படுகின்றன.

மீத்தேனு க்கும், பாறை எரிவாயு விற்கும் பெரிய வித்தி யாசங்கள் ஒன்று மில்லை. சொல்ல ப்போனால் மீத்தேனை விட பல்லா யிரம் மடங்கு அதிக பாதிப்பு களை உருவாக்கக் கூடியது. 

இந்த திட்டத்தை கொண்டு வருவதால் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்குமாம். ஆனால் மக்களுக்கு?

பாதிப்பு களுக்கு யார் பொறுப்பு ?

பாறை எரிவாயு எவ்வாறு பிரித்தெடுக் கப்படுகிறது? மித்தேன் வாயுவை பிரித்தெடுப் பதற்கு 500 அடி முதல் 1000 அடி வரை துளையிட்டு, 
அதில் பக்க வாட்டில் 100 அடி வரை துளையிட்டு, 600-க்கு மேற்பட்ட வேதிப் பொருட்களை நீருடன் கலந்து அதிக அழுத்தத்தில் செலுத்தும் போது, 

அது பூமியை துளைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை வெளிக் கொண்டு வரும். இதுவே இப்படி என்றால், பாறை எரிவாயு பிரித்தெடுக்கும் முறை இதை விட பயங்கரம்.

இந்த பாறை எரிவாயு எடுப்பதற்கு நீரழுத்த பிளவு (hydralic process) முறை பயன்படுத்தப் படுகிறது. 

இதன்படி பூமிக்கடியில் கிட்டத்தட்ட 10,000 முதல் 20,000 அடி ஆழம் வரை துளையிட்டு, அதன் பக்க வாட்டில் 1 கி.மீ. வரை துளையிட்டு, அதில் 600க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்களை, 

மணலுடன் நீரையும் சேர்த்து, அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறை எரிவாயு வெளிக்கொண்டு வரப்படு கிறது.

உள்ளே செலுத்தப் படுகின்ற வேதிக் கரைசல்கள் வெளிக் கொண்டு வரப்பட்டு, மேல்மட்ட நீரில் கழிவு களாக கலந்து விடப் படுகிறது. 

இப்படி கலந்து விடப்படும் நீர் வேளாண் விளை நிலங் களிலும், ஆறு களிலும் தான் கலக்கும்.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் படுவதோடு, நீருடன் காற்றும் மாசுபட்டு, டெல்டா காவிரி படுகையே பாழாகி, இப்பகுதி மக்களுக்கு புற்று நோய் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. 
இந்த கழிவு நீர் கலப்ப தால், தமிழகத்தின் மற்றுமோர் கூவமாக மாறக் கூடிய அபாயத்தில் காவிரி உள்ளது.

மிகப்பெரிய அபாயம்

இத்திட்டத் தினால் தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்ட மக்கள் பாதிக்கப் படுவதுடன், 19 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது

இந்த பாறை எரிவாயு என்பது வளைகுடா நாடுகளிலும், ஒன்று க்கும் உதவாத தரிசு நிலங்களில் எடுக்கப்படுவது. 

இதனால் ஏற்படும் பாதிப்புகள் அறிந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இத்திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் டெல்டாவை பாலை வனமாக்கும் இந்த திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று பல்வேறு தரப்பின ரும் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.
டெல்டா விவசாயிகளை அல்லாட வைக்கும் ஷேல் கேஸ் !
தமிழகத்தின் உணவு உற்பத்தியில் 9% டெல்டா பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப் படுகிறது. 

எனவே விவசாயத்தை பாழ் படுத்தும் டெல்டாவை பாலை வனமாக்கும் இத்திட்டத்திற்கு எதிராக தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் விவசாயம் செய்வதை விட, விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் திட்டத்திற்கு எதிராக போராடு வதற்கே நேரம் சரியாக உள்ளது. 

எனவே மத்திய அரசும் விவசாயி களின் நலன் கருதி இத்திட்ட த்தை தடை செய்ய வேண்டும் என்பதே விவசாயி கள் மட்டு மல்ல; 

தமிழர்கள் ஒவ்வொரு வரின் எதிர் பார்ப்பாக உள்ளது. விகடன்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)