இணையம் மூலம் தொடர் கொலைகள் !

0
வாழ்க்கையில் பாதிக்கப் பட்டவர்கள், அவர்களது தற்கொலை எண்ணங்களை பகிர பயன்படுத்தும் வலை தளங்களை தடுக்க விரும்புவ தாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இணையம் மூலம் தொடர் கொலைகள் !
இத்தகைய வலை தளங்களை பயன்படுத்தி, தொடர் கொலைகள் நிகழ்ந்த காரணத் தினால் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அக்டோபரில், டோக்கியோ வின் புறநகர் பகுதிகளில் உள்ள "திகில் வீடு" என்று கூறப்படும் 

ஒரு வீட்டில் குளிர் சாதன பெட்டிகள் மற்றும் கருவி பெட்டிகளில் ஒன்பது சிதைந்த உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டன. 

ஒன்பது தலை களுடன் அதிக எண்ணி க்கையில் கை மற்றும் கால் எலும்பு களை விசாரணை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

ஜப்பானையே உலுக்கிய இந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் ஒன்பது கொலை களை தாம் செய்துள்ள தாக 27 வயதான டகஹிரொ ஷிரைஷி ஒப்புக் கொண் டுள்ளார்.

பாதிக்கப் பட்டவர் களை அவர் எவ்வாறு கண்டு பிடித்தார்?
சமூக வலை தளங்களில் தற்கொலை எண்ணங் களை சிலர் வெளிப் படுத்தியதன் மூலம், ஷிரைஷி க்கு அவர்களை தெரிய வந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

பாதிக்கப் பட்டவர் களை தன் வீட்டிற்கு வர வழைத்து, அவர்கள் உயிரை எடுக்க தாம் உதவுவ தாக ஷிரைஷி கூறி யுள்ளார்.

15 வயது மாணவி உட்பட மூன்று உயர் நிலைப்பள்ளி மாண வர்கள், இருபது களில் உள்ள நான்கு பெண்கள் மற்றும் இருபது வயதுடைய ஆண் ஆகியோர் ஷிரைஷி யால் பாதிக்கப் பட்டவர்கள் ஆவர்.

இதில் அந்த இருபது வயதுடைய ஆண், தனது காதலி குறித்த தகவல் களை ஷிரைஷியிடம் கூறிய பிறகு கொல்லப் பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக் கின்றன.

ஓர் இளம் பெண் காணாமல் போனதை தொடர்ந்து சந்தேக த்தின் அடிப்படை யில் இவர் வீட்டில் சோதனை நடத்தப் பட்டது.

அந்தப் பெண், தன் உயிரை மாய்த்துக் கொள்ள சமூக ஊடகங் களில் யாரையோ பார்க்க சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.

தற்கொலை வலை தளங்கள் என்றால் என்ன?
தங்களை தாங்களே கொல்ல விரும்பு கிறவர்களுக் கான தகவல் களை இந்த தற்கொலை வலை தளங்கள் மற்றும் சமூக ஊடக குழுக்கள் வழங்கு கின்றன.

அவர்கள் உயிரை அவர்களே மாய்த்துக் கொள்ள இது போன்ற வலை தளங்கள் ஊக்கு விக்கின்றன.

இணையதள பயன்பாடு இளைய தலைமுறை ஜப்பானிய மக்களுக்கு சில விஷயங் களை மோசமாக்கக் கூடும் என 

டோக்கியோவை சார்ந்த தற்கொலை தடுப்பு மையத்தின் தலைவர் டோரூ ஈகவா, ஜப்பான் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித் துள்ளார்.

முன்ன தாக, தனியாக தற்கொலை செய்ய பயந்து சிலர் பின் வாங்கினர். ஆனால் இந்த சூழலை தற்கொலை தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மாற்றி அமைத்து விட்ட தாக அவர் கூறினார்.

இதற்கான ஆன்லைன் நண்பர்கள் கிடைத்த பிறகு பயம் என்ற தடையை எளிமை யாக அவர்கள் கடந்து விடு கின்றனர் எனவும் டோரூ தெரிவித்தார்.
எப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற தகவல் களை உடைய வலை தளங்களை பார்வை யிடும் 20 சதவீத இளை ஞர்கள், 

ஏற்கனவே தற்கொலை முயற்சி செய்த வர்கள் என்றும் அதனை ஒப்பிடும் போது வெறும் மூன்று சதவீத இளைஞர்கள் மட்டுமே 

பொதுவாக இந்த தளத்தை பார்வையிட வருவ தாகவும் 2015 ஆம் ஆண்டில் பிரிட்ட னில் நடை பெற்ற ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஜப்பானில் தற்கொலை விகிதம் எவ்வளவு?

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் படி, 2015 ஆம் ஆண்டில் 100,000 மக்களுக்கு 19.7 சதவீத மக்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண் டுள்ளனர்.

இந்த புள்ளி விவரங்கள், ஜப்பானை அதிக தற்கொலை விகிதம் உள்ள நாடாக ஆக்காது.
தென் கொரியா வில் 2015-ம் ஆண்டில் 100,000 மக்களுக்கு 28.3 சதவீத மக்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண் டுள்ளனர்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா வில், இந்த புள்ளி விவரங்கள் 100,000 மக்க ளுக்கு முறையே 8.5 மற்றும் 14.3 சதவீத மாக உள்ளது. பிபிசி
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings