தமிழகத்தில் ஆய்வு ஏன்? கவர்னர் விளக்கம் !

0
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்று ஒரு சில மாதங்கள் அமைதியாக இருந்த பின்னர் தற்போது திடீரென கோவை உள்பட ஒரு சில நகரங்களில் அரசுப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். 
தமிழகத்தில் ஆய்வு ஏன்? கவர்னர் விளக்கம் !
இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் கவர்னர் சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. 

அந்த விளக்க அறிக்கை யில் கூறி யிருப்ப தாவது:

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல் பட்டிருக்கிறேன். ஆய்வில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.

வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு. சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது

நேரடி ஆய்வை பலர் பாராட்டி யுள்ளனர், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. கட்டாயப் படுத்தியோ, வற்புறுத்தியோ எந்த கூட்டத்திற்கும் அதிகாரிகளை அழைக்க வில்லை.

ஆளுநர் சட்ட நடை முறைகளுக்கு மாறாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை
அசாமில் ஆளுநராக இருந்த போதும் இதே போல் ஆய்வுப் பணி களை மேற் கொண்டுள்ளேன். இதை அங்குள்ள மக்கள் பாராட்டி யிருக்கிறார்கள் தமிழகத்தில் இது போன்ற ஆய்வுகள் தொடரும். 

தமிழக த்தில் மேற்கொண்ட ஆய்வுகளை தமிழக அரசும் அமைச்சர்களும் பாராட்டியுள்ளனர். இவ்வாறு ஆளுனர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings