புகார் அளித்த மனைவியை பாடி மயக்கிய கணவர் !

0
சண்டை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவியை, கணவன் பாட்டுபாடி சமாதானம் செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புகார் அளித்த மனைவியை பாடி மயக்கிய கணவர் !
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியுள்ளது. இதனால் அந்த பெண் தன் கணவன் மீது அருகில் உள்ள காவல் நிலைய த்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து அந்த தம்பதியினரை காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைந் திருந்தார். விசாரணைக்கு தம்பதிகள் தனித்தனியே ஆஜராயினர். 
அப்போது கணவர் அவரது மனைவிக்கு பிடித்த மான பாடலை பாட, அந்த பெண் அவரது கணவர் தோளில் சாய்ந்துக் கொண்டார்.

இதையடுத்து இவருடையே சண்டை காணாமல் போனது. காவல் துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings