பக்கவாட்டில் கண்ணாடி இல்லாத பைக்குகளுக்கு அபராதம் !

0
இரு சக்கர வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களைக் காட்டும் பக்க வாட்டுக் கண்ணாடிகள் இல்லாமல் ஓட்டுபவர்களிடம் இருந்து 
பக்கவாட்டில் கண்ணாடி இல்லாத பைக்குகளுக்கு அபராதம் !
அபராதம் வசூலிக்கக் கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தர விட்டுள்ளது.

தூத்துக்குடி யைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில் கூறியிருப் பதாவது:

இரு சக்கர வாகனங் களில் பின்னால் வரும் வாகனங்களை தெரிந்து கொள்ள வைக்கப் பட்டிருக்கும் பக்க வாட்டுக் கண்ணாடி களை பலர் அகற்றி விட்டு வாகனங் களை ஓட்டு கின்றனர். 

இதனால் விபத்துகளும், உயிரிழப்பு களும் அதிகரித்து வருகின்றன.போக்கு வரத்து ஆய்வுப் பிரிவின் ஆய்வுப்படி 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 48,420 பேர் உயிரிழந் துள்ளனர். 

77.1 சதவீத விபத்துகள் ஓட்டுநரின் தவறாலேயே நிகழ்கிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. 

அபராதம்
பெங்களூரு வில் பக்கவாட்டுக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர் களிடம் ரூ.300 அபராதம் வசூலிக்கப் படுகிறது. 

ஆகவே, தமிழகத்திலும் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கு மாறு போக்கு வரத்துத் துறை ஆணையர் மற்றும் டிஜிபிக்கு உத்தர விட வேண்டும் எனக் கோரி யிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு மனுவை பரிசீலித்து 4 வாரங் களில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணை யருக்கு உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings