கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் !

0
நெஞ்சில் துணி விருந்தால் படத்தில் நாயகி மெஹ்ரீன் நடித்த காட்சிகளை நீக்கியிருப் பதற்கு மன்னிப்பு கேட்டு ள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் !

சுசீந்திரன் இயக்க த்தில் வெளியாகி யுள்ள நெஞ்சில் துணி விருந்தால் திரைப் படத்தின் எடிட்டட் வெர்ஷன் நேற்று (நவம்பர் 12) மதியம் முதல் அனைத்து திரைய ரங்குகளி லும் வெளியானது. 


கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) அன்று வெளியான இந்தப் படம் திரைய ரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களுக்குத் தொய்வை ஏற்படுத்து கின்றன என்று விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில் விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு படக்குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப் பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இது குறித்து இயக்குநர் சுசீந்திரன், நெஞ்சில் துணி விருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப் பட்ட அனைத்து காட்சி களும் நீக்கப் பட்டுள்ளன. 

படத்தில் இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் காட்சி களிலும் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. 


நெஞ்சில் துணி விருந்தால் திரைப் படத்தின் புதிய வெர்ஷன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரை யரங்கு களிலும் திரையிடப் பட்டுள்ளது. 

நாங்கள் 15 நாள்கள் மெஹ்ரீன் சம்பந்தப் பட்ட காட்சி களைப் படமாக்கி னோம். மெஹ்ரீன் நடித்த காட்சி களைச் சூழ்நிலை காரணமாக நீக்கி யுள்ளோம். 

இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று வருத்தத் துடன் தெரிவித் துள்ளார்.

சந்தீப் கிஷான், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரிஷ் உத்தமன், துளசி, ஷாதிகா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத் துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings