புதுச்சேரியில் போத்தீஸ் அருகில் கொடூர கொலை !

0
போத்தீஸ் துணிக்கடை அருகில் ரவுடி ஒருவர் பழிக்குப் பழி வாங்கும் விவகார த்தில் வெட்டிக் கொலை செய்யப் பட்ட விவகாரம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
புதுச்சேரியில் போத்தீஸ் அருகில் கொடூர கொலை !
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கொளஞ்சி யப்பன். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதில், ஒசூரை சேர்ந்த சுதாகர் என்பவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அதன் பின் அவர் உயிருக்கு பயந்து, புதுச்சேரியில் தலை மறைவாக இருந்து ள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் போத்தீஸ் துணிகக்டை அருகில் உள்ள இருசக்கர வானகத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கார் மோதியது.

அதில் நிலைதடுமாறி விழந்த கொளஞ்சி யப்பனை, காரில் இறந்து இறங்கிய கும்பல் கத்தி மற்றும ரிவாலால் பயங்கர மாக தாக்கியது.

இதில் தப்பி ஓடிய கொளஞ்சி யப்பனை துரத்தி வெட்டி சாய்த்தது. அதன் பின் அங்கிருந்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது.

அதன் பின் காரில் சென்ற அந்த கும்பல் 20க்கும் மேற்பட்ட வாகனங் களை இடித்து தள்ளி விட்டு சென்றது. எனவே, இது குறித்து பொது மக்கள் போலீசாரு க்கு தகவல் கொடுத்தனர்.
எனவே, போலீசார் அவர்களின் வாகனத்தை துரத்தி சென்றனர். அவர்கள் கடலூரை நோக்கி சென்றதால், அந்தப்பகுதி போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை யடுத்து ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப் பட்டது. அப்போது காரில் வந்த கொலை யாளிகள் தடுப்பு களை மோதிவிட்டு தப்பினர்.

ஆனாலும், அவர்களி துரத்தி சென்ற போலீசார் கடலூர் உழவர் சந்தை அருகே அவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது அங்கு கூடிய பொது மக்கள், அந்த கொலையாளிகளுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

ஒரு வழியாக அவர்களி டமிருந்து கொலை யாளிகளை மீட்ட போலீசார், புதுநகர் காவல் நிலை யத்தில் வைத்து தற்போது விசாரணை நடத்தி வருகின் றனர்.
இதில், சுதாகரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த கொலை நடந்தி ருப்பது தெரிய வந்துள்ளது. பட்டப் பகலில், மக்கள் நடமாடும் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப் பட்ட விவகாரம் புதுச்சேரி யில் அதிர் ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings