சாகசம் சினிமாவில் மட்டுமெ கை கொடுக்கும்... காவல்துறை !

0
சாகசங்கள் செய்வதை சினிமாவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்; நிஜ வாழ்க்கையில் வேண்டாம்' என்று பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு மும்பை காவல்துறை அறிவுரை வழங்கி யுள்ளது.
சாகசம் சினிமாவில் மட்டுமெ கை கொடுக்கும்... காவல்துறை !
முன்னதாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆட்டோவில் பயணித்த ரசிகை ஒருவர் அருகில் பாலிவுட் நடிகர் வருண் தவானின் கார் நிற்பதைப் பார்த்தார். 

உடனே அவரைப் புகைப்படம் எடுத்தார். அடுத்த தாக செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகை யிடம் போனை வாங்கி செல்ஃபி எடுத்துக் கொடுத்தார் வருண். 

அப்போது கார் மற்றும் ஆட்டோவு க்கு வெளியே இருவரும் தங்கள் தலையை நீட்டிய வாறு இருந்தனர். இது தொடர்பாக புகைப் படத்தோடு செய்தி வெளி யானது. 

அதைக் குறிப்பிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காவல்துறை, ''வருண் தவான், இத்தகைய சாகசங்கள் வெள்ளித் திரையில் செல்லு படியாகும். ஆனால் கண்டிப்பாக மும்பை நகரச் சாலை களில் இல்லை.
நீங்கள் உங்கள் வாழ்க் கையோடு உங்களின் ரசிகர்கள் மற்றும் சிலரின் வாழ்க்கை யிலும் ஆபத்தை ஏற்படுத்தி இருக் கிறீர்கள். 

இளைஞர் களின் அடை யாளமாகிய உங்களிடம் இருந்து சிறப்பான செயல் பாடுகளையே எதிர் பார்க்கிறோம்'' என்று தெரிவித் துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பதிலளித் துள்ள வருண், ''மன்னிப்பு கோரு கிறேன். அப்போது சாலையில் வாகனங்கள் அனைத்தும் நின்று கொண்டு தான் இருந்தன. 
ரசிகையின் மனம் புண்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவ்வாறு செயல் பட்டேன். இனி பாது காப்பையும் கருத்தில் கொள்வேன் '' என்று பதிவிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings