உலகின் ஈடு இணையற்ற தலைவர் !





உலகின் ஈடு இணையற்ற தலைவர் !

Fakrudeen Ali Ahamed
By -
0
உலகின் எந்த பகுதியி லும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய் வார்கள். 
உலகின் ஈடு இணையற்ற தலைவர் !
தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவித மான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். 

அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்ட மாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத் துள்ளது.

தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை, தலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை,

ஆனால் கொள்கை மட்டும் விஸ்வ ரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. 14 நூற்றா ண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது. அவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.

உள்ளங் களை ஈர்த்தது மட்டுமல்ல, 200 கோடி மக்களும் தங்கள் உயிரை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கி றார்கள். 

200 கோடி மக்களும் தங்களு டைய வாழ்வில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சினை களுக்கும்  அவர் காட்டிச் சென்ற வழியிலேயே தீர்வை எட்டு கின்றனர். இது வேறு எந்த சமுதாய த்திலும் இல்லாத தனிச் சிறப்பு.

இஸ்லாமியர்கள் அதிகம் தர்மம் செய்ப வர்கள் என்று பிரிட்டன் கூறுகிறது. 

உலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல், நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப் பட்டாலும் இஸ்லாமி யர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.

இஸ்லாமி யர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மை யான சொந்தக்காரர். அவர் தான் இஸ்லாமி யர்களுக்கு மனித நேயத்தை ஊட்டினார்.
பொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும் பாலான நாடுகள் பின் பற்றி கொண்டிருக் கிறது.

அவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

யார் அவர்..?

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே..!!

ஜனாதிபதி யாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும். இல்லை யென்று வரு வோர்க்கு "இதோ இந்த ஒட்டக த்தை ஓட்டிச் செல்", என்று 

சொல்லு மளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத் திலும் கூட, ஜனாதிபதி யின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சி யாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன் படுத்த இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)
அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசி யாற்றினார். பசியின் கொடுமை யால் இரவில் இரவில் தூக்க மின்றி அமர்ந் திருந்த வறுமை. (ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை. உடுத்தி ருக்கும் உடை கூட, வெறும் இரு போர் வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வை யொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக் கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடை யாக பயன் படுத்திக் கொள்கி றேனே என்று அதை அவ்வாறே பயன் படுத்து கிறார்கள்.

போர்வையை வேட்டி யாக பயன் படுத்துகின்ற அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 1277)

அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து  அதில் தான் உணவை வைத்து உண்டிருக் கிறார்கள். (ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன் படுத்துவ தற்கும் தான் பாய் வைத்தி ருந்தார்கள். (ஆதாரம் புஹாரி 730)
தோலினால் ஆன தலைய ணையை பயன் படுத்தி னார்கள். (ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்தி ருந்தால் இன்னொரு வரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித் தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்ப வர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)

நாமெல்லாம் கற்பனை யில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை. நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக் கிறோமா?

இன்று, பிளாட் ஃபாரத்தில் பிச்சை யெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம். நபிகள் நாயக த்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் 

கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலு கின்றதா?
இத்தனை க்கும் அப்போது அவர் மன்னர்.

நாட்டுக்கே ஜனாதிபதி.

போர்ப்படை தளபதி..

மார்க்க அறிஞர்.

இறை வனால் நியமிக்கப் பட்ட இறைத் தூதர்,

சமுதாய த்தை நன்னெறிப் படுத்த வந்த புரட்சி யாளர்,

என பல்வேறு பரிணா மங்களைக் கொண்ட மாமனி தராக அவர் திகழ்ந்தார்.

ஆக‌,

வறுமை யிலும் நேர்மை.

வறுமை யிலும் ஒழுக்கம்.

வறுமை யிலும் வீரம்

வறுமை யிலும் நீதி தவறாத நல்லாட்சி

வறுமை யிலும் சுய மரியாதை

வறுமை யிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல் லாம் சிலிர்க் கிறது..
மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உரு வாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.

அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கி னார்.

நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனை யிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர் (தூதர்)...!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)