தமிழகத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் !

0
அடுத்த 24 மணி நேரத்தில், சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் !
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் 

‘தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்டி ருந்த வளி மண்டல மேலடுக்குச் சூழற்சி, 

தொடர்ந்து அதே பகுதியில் நிலவு கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம்,

நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை உள்ளிட்ட இடங் களில் கனமழை அல்லது மிகக் கன மழை பெய்யும். 

தூத்துக்குடி, கன்னியா குமரி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக் கூடும். 
இன்று காலை அதிக பட்சமாக நாகையில் 9 செ.மீ மழை பதிவானது. சென்னை யில் ஒரு சில இடங்களில் 6 செ.மீ பதிவானது’ என்றார்.

மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட் டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி, முன்னெச் சரிக்கை நடவடி க்கைகள் மேற் கொள்ளும் என எதிர் பார்க்கப் படுகிறது!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings