நீர்மூழ்கியில் பெண் அதிகாரிகளுடன் உயரதிகாரி உல்லாசம் !

0
இங்கிலாந் தின் கடற் படைக்குச் சொந்தமான அணுசக்தி மூலம் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பலில், இளநிலை பெண் அதிகாரி ஒருவருடன் 
நீர்மூழ்கியில் பெண் அதிகாரிகளுடன் உயரதிகாரி உல்லாசம் !
பாலுறவில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகாரியை பதவி விலகுமாறு சக வீரர்கள் அச்சுறுத்தி வருவ தாக குற்றச் சாட்டுக்கள் எழுந்து ள்ளன.

எச்.எம்.எஸ். விஜிலன்ஸ்’ என்ற அந்த நீர் மூழ்கிக் கப்பல், வட அத்தி லாந்திக் சமுத்திரப் பகுதியில் கண் காணிப்புப் பணிகளுக்காக நிலை நிறுத்தப் பட்டிருந்த போது, 

கப்பலில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், தமது இள நிலை பெண் அதிகாரிகள் இருவருடன் உடலுற வில் ஈடுபட்ட தாக தலைமை யகத்துக்கு தகவ ல்கள் கிடைக்கப் பெற்றன.

இதை யடுத்து, குறித்த கப்பல் கரை திரும்பி யதும், உறவில் ஈடுபட்ட அந்த உயரதி காரியான ஸ்டுவர்ட் ஆர்ம்ஸ்ட்ரோங் உடனடி யாகப் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.
பாலுறவு க்கு உட்படுத்தப் பட்ட இரண்டு பெண் அதிகாரி களில் ஒருவர் ரெபேக்கா எட்வர்ட்ஸ் என்று அடை யாளம் காணப் பட்டார்.மற்றொருவர் யார் என்பது குறித்து தகவ ல்கள் வெளியாக வில்லை.

ஸ்டுவர்ட்டின் வற்புறுத் தலுக்கா கவே தான் உறவு க்குச் சம்மதித் ததாக ரெபேக்கா கூறியதை யடுத்து அவர் மீது நடவடி க்கை எடுக்கப் படவில்லை.

இந்த நிலை யில், ரெபேக்கா பதவி விலக வேண்டும் என்று சக வீரர்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர்.

கடற்படை யில் ஆண் வீரர்க ளுடன் பெண் வீராங் கனைகள் இணைந்து செயற்படக் கூடாது என்ற விதிமுறை கடந்த ஆறு வருடங் களுக்கு முன்னரே நீக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)