நோய்களை விரட்டும் நிலவேம்பு கசாயம் !

0
நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகை களான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக் கப்படும் அருமருந் தாகும்.

நோய்களை விரட்டும் நிலவேம்பு கசாயம் !
நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது.

விதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நிலவேம்பு பெரியா நங்கை, சிறியா நங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக் குருந்து போன்ற
எங்க கிட்டயே காசு கேப்பியா பங்க் ஊழியர்களை வெட்டிய கும்பல் !

மாற்றுப் பெயர் களிலும் அழைக்கப் படுகிறது. நிலவேம்பு முழுவதும் மருத்துவப் பயன் கொண்டது.கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

இதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும், புத்தி தெளிவு உண் டாகும், மல மிளக்கும், தாதுக் களைப் பலப் படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் விட்டு, விட்டு வரும் காய்ச் சலைக் குறை க்கும், பசியை உண்டா க்கும்.

விட்டு, விட்டு வரும் காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத் தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளை களில் 3 நாட்கள் சாப்பி ட்டால் பலன் தெரியும்.

தொடர் காய்ச் சலை கட்டுப் படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலை பசையை காலை மாலை வேளை களில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளை களில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.
நிலவேம்பு இலைச் சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்த மான நோய்கள் குண மாகும். 

5 கிராம் அளவு நிலவேம்பு இலை தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும். அல்லது 5 பெரியா நங்கை இலை களுடன் 10 சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். 

அல்லது வேரில் இருந்து கசாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்க ளுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளி யேறும்.
நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி?
நிலவேம்பு முழுத் தாவர த்தையும் உலர்த்தி பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். 

குளிக்கும் போது, தேவை யான அளவு நீரில் குழைத்து பசை யாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன் றவை குண மாகும்.
நிலவேம்பு இலை யில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை யில் மட்டும் 2 வாரத் திற்கு குடித்து வர காய்ச்சல் 

மற்றும் வயிற்றுப் போக் கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும். நிலவேம்பு செடியை வளர்த் தால் அங்கு பாம்புகள் வருவ தில்லை.

சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட உயர்நிலை ஆய்வு களில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப் பட்டுள் ளது. 

பசியைத் தூண்டும்: 

பசியால் அவதிப் படுபவர் களை விட பசியின்றி அவதிப் படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. 

இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவ தில்லை. இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலை யில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

குடற்புழு நீங்கும்

குடற் புழுக்கள் உடலுக்கு தேவை யான ஊட்டச் சத்துக்கள் அனை த்தையும் உறிஞ்சி விடுகின்றன. இதனால் நோயின் தாக்கு தலுக்கு ஆளாக நேரிடும். 
குடற் புழுக்கள் நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாய மாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளை யில் அருந்தி வர வேண்டும். 

உடல் வலுப்பெறும்: உடல் தேறாமல் மெலிந்து காணப் படுபவர் கள் நில வேம்பு கசாயம் குடித்து வந்தால் பலன் கிட்டும்.

மயக்கம் நீங்க: 

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சி யான நிகழ்வு களை காணும் போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் அருந்து வது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்கும்

பித்தம் பிசகினால் பிராணம் போகும் என்பது சித்தரின் வாக்கு. அதன்படி பித்தநீர் உடலில் அதிக மானால் உடலில் பல நோய்கள் உருவா கிறது. 
அதிசயம் நிறைந்த கைலாயம் மலை !
இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்கும்: 

அடிக்கடி தலைவலி யினால் அவதிப் படுபவர்கள் நிலவேம்பு கசாய த்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். 
தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது. 

குழந்தைகளுக்கு: 

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தை களுக்கு நிலவேம் பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

அஜீரணக் கோளாறு

நில வேம்பு (காய்ந்தது) 16 கிராம், வசம்புத் தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம். 

இவை அனை த்தையும் ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊற வைத்து 

எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். 

கர்ப்பப்பை கட்டிகள்: 

தைராய்டு பாதிப்பு உள்ள வர்கள் நிலவேம்பை காய வைத்து கசாயம் செய்து அருந்தி னால் தைராய்டு பாதிப்புகள் குறையும். 
வைட்டமின் டி மாத்திரையால் சிறுநீரகக் கல் வரும்
மேலும் பெண்க ளுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவை யற்ற நீர் போன்ற வற்றை நீக்கும்.
எங்கு கிடைக்கும்?

நிலவேம்புப் பொடியில் நிலவேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற 

ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன. இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப் பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது. 

நிலவேம்பு பொடி தமிழக த்தின் எல்லா அரசு மருத்துவ மனைகளி லும் இலவச மாக விநியோகி க்கப்படு கிறது. 

சித்த மருத்துவ கடைகளில் விற்கப் படுகிறது. 

கசாயம்: 

நிலவேம்பு பொடி 10 கிராம், 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 

இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும் போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்க லாம். இது ஒரு நபருக் கான அளவு.

யாரெல்லாம் குடிக்க கூடாது?

7 வயதுக்கு குறைவான குழந்தை களுக்கு இந்த கசாய த்தை மருத்து வரின் பரிந்துரை யில்லாமல் கொடுக்கக் கூடாது. 
அதே போல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்று வலியால் கஷ்டப் படுகிறவர் களுக்கு இந்த கசாயம் கொடுக்கக் கூடாது. 

முன்னெச்சரிக்கை 

வீட்டில் யாருக் காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவ ர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். 

காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது. எல்லா ஆலோசனை களையும் மருத்து வரின் பரிந்து ரைப்படி செய்வது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings