எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு !

அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்ட மன்றத்தில் 
எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு !
தமது பலத்தை நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்ளும் என்று எதிர் பார்க்கப் பட்டது. எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கவர்னரை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

ஆனால், முதல்வர் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் வித்தி யாசாகர்ராவ் உத்தர விடவில்லை.

குடியரசுத் தலை வரை

இந்நிலை யில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, திமுக எம்.பி. கனிமொழி, சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாரம் எச்சூரி, சி.பி.ஐ. 

தேசிய செயலாளர் டி.ராஜா, உள்ளிட்டோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வியாழக் கிழமை டெல்லி யில் சந்தித்து ஒரு மனுவை அளித்தது.
19 அதிமுக எம்.எல்.ஏ .க்கள் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கவர்னரை சந்தித்துக் கடிதம் கொடுத்த பிறகு அரசு சட்ட மன்றத்தில் தமது பெரும் பான் மையை இழந்து விட்டது. 

அதன் பிறகு மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ. க்கள் அரசுக் கான தங்கள் ஆத ரவைத் திரும்பப் பெற்றனர். 234 உறுப் பினர் களை உடைய 

அவையில் அரசுக்கு ஆதரவாக அவைத் தலை வரையும் சேர்த்து தற்போது 113 எம்.எல்.ஏ. க்கள் மட் டுமே உள்ள னர். ஒரு இடம் காலியாக உள்ளது. 

அவை யில் திமுக- வுக்கு 89 எம்.எல்.ஏ. க்களும், காங்கிரசு க்கு 8 எம்.எல்.ஏ க்களும், முஸ்லீ க்குக்கு ஒரு எம்.எல்.ஏ. வும், அதிமுக அதிருப்தி அணி யில் 22 பேரும் உள் ளனர்.

துணை முதல் வருக் குப் பதவிப் பிரமா ணம் செய்யும் போது அரசுக்கு சட்ட மன்ற த்தில் போதிய பலம் இரு க்கிறதா என்று கவர்னர் உறுதி செய்தி ருக்க வேண்டும்.
இந்தச் சூழ்நிலையை கவர்னரின் கவன த்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக எதிர்க் கட்சித் தலைவர் கவர்னருக்கு ஆகஸ்டு 28 அன்று ஒரு கடிதம் எழுதினார். 

ஆனாலும் கவர்னர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, என்று அந்த மனு வில் குறிப்பிடப் பட்ட ள்ளது.

உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புகளால் உரு வாக்கப்பட்ட பல அரசியலமைப்பு சட்ட மரபுகள் கவர்னரால் மீறப் பட்டுள்ளன. 

அரசு தமது ஆதரவை இழந்து விட்டதாக சந்தேகம் எழும் போது அவையில் பலத்தை நிரூபிக்கும்படி அரசைக் கோர வேண்டும் என்பது நிறுவப் பட்ட மரபு.எஸ்.ஆர். 

பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பும் இதையே வலி யுறுத்து கிறது என்று அந்த மனுவில் குறிப் பிடப் பட்டு ள்ளது

ஒரு அரசு ஆதரவை இழந்து விட்டதா இல்லையா என் பதை கவர் னரோ, ஜனாதிபதியோ கூட தனிப்பட்ட முறையில், தமது அகவுணர்வால் முடி வெடுக்க முடி யாது என்பதை அத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.
கவர்னர் அமைதி காப்பது, பாராளு மன்ற முறையை பலவீனப் படுத்துவதோடு, எம்.எல்.ஏ க்கள் குதிரை பேரம் நடத்தப்படு வதையும் ஊக்கு விக்கிறது என்று அந்த மனு வில் தெரிவிக்கப் பட்டது.

இது பற்றி பி.பி.சி. தமிழ் சேவையிடம் பேசிய சி.பி.ஐ. தேசிய செயலாளர் ராஜா, மனுவைப் பெற்றுக் கொண்டு, 

கோரிக் கையை செவிம டுத்த குடியரசுத் தலைவர், எந்த மாநில த்திலும் அரசி யல் ஸ்திர மற்ற நிலை நீடிப்பது நல்ல தல்ல என்று குறிப் பிட்டார்,

இந்த விஷயத்தை தாம் கவனிப்பதாகவும், தமக்கு சற்று கால அவகாசம் வேண் டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியதாக ராஜா தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings