பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகள் பூட்டி வைப்பு !

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவலிங்க பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்குள் பூட்டி வைத்து கைதிகள் போல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகள் பூட்டி வைப்பு !
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போபால் கமலா நேரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவலிங்க பூஜை நடத்தப் பட்டுள்ளது. 

இதில் முஸ்லிம் மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளி முதல்வர் நிஷா கமரானி கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அங்கு பயிலும் சுமார் 100 முஸ்லிம் மாணவிகள் இது போன்ற பூஜை செய்வது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்பதால் அதை செய்ய மாட்டோம் என்று மறுத்து விட்டனர். 

இதனால் முஸ்லிம் மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத பள்ளி ஆசிரியை தெரிவிக்கையில், மத்திய பிரதேசத்தில் சில தனியார் பள்ளிகளில் இது போன்ற பூஜைகள் நடை பெறுகின்றன. 
ஆனால் அனைத்து மதத்தினரும் பயிலும் அரசு பள்ளிகளில் இது போன்ற ஒரு சார்பு மதபூஜைகள் நடத்தப் படுவது மாணவர்களுக் கிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றார்.
Tags:
Privacy and cookie settings