நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?

நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டு ள்ளது. மனைவியை கட்டியணைப் பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையு மில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?
நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்த மிடுவார்கள் (அறிவிப்பவர்: ஆயிஷா(ث)

ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம் 24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)

சில அறிவிப் புக்களில். நானும் நோன்பா ளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பா ளியான அவர் என்னை முத்தமிட்டார் என்று காண்ப் படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)

இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்று கள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடு கின்றோம்.

ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன் பாளியாக இருக்கும் போது தமது மனை வியை முத்தமிட்டு விட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரிய தொரு தவறைச் செய்து விட்டேன்.

நோன்பு டன் (என் மனை வியை) முத்த மிட்டு விட்டேன் என்றார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றி ருக்கும் போது வாய் கொப்ப ளிப்பது பற்றி என்ன எண்ணு கிறாய்?
என வின வினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறி ல்லையே எனப் பதிலளி த்தார்கள். உடலுறவு, நீர் அருந்து தல் போன்றது என்றால்

முத்த மிடுவது வாய் கொப்ப ளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த் தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)

எனவே, நோன் பாளியான கணவன் - மனைவி முத்த மிட்டுக் கொள் வதில் தவறி ல்லை என்பதை உணர லாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுற வில் ஈடுபட்டு விடு வோமோ என்ற

அச்சம் இருப்பின் அதிலி ருந்து விலகிக் கொள்ளல் கடமை யாகும். நபியவர் களின் உவமான த்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னு மொரு உண்மை யையும் அறிய லாம். 
நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்ல லாகாது என்பது நபிமொழி.

இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்த மிடுவதில் எல்லை மீறிச் சென்றிட லாகாது என்ப தையும் யூகிக்கலாம்.
Tags: