கேரளா கொல்லம் நகரில் பெண் டாக்டர் அட்டகாசம் !

கொல்லம் நகரில், பெண் டாக்டர் ஒருவர் போதையில் கார் ஓட்டி, ஆறு கார்களை சேதப்படுத்தி யுள்ளார். கேரளாவின் கொல்லம் நகரில் அமைந்துள்ள அஸிசியா மருத்துவ கல்லூரியில், பல் டாக்டராக வேலை செய்பவர், ரேஷ்மா பிள்ளை. 
கேரளா கொல்லம் நகரில் பெண் டாக்டர் அட்டகாசம் !
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இவர், மது போதையில் சொகுசு கார் ஓட்டி சென்றுள்ளார். காரில் அவரது நண்பர்களும் உள்ளனர். 

மதனந் தாஜக்ஷன் பகுதியில் இவரது கார் கட்டுப்பாட்டை மீறி, ஆறு கார்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

அப்பகுதி வாசிகள் டாக்டர் ரேஷ்மா, அவரது நண்பர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் பிடிக்க வந்தவர் களை ரேஷ்மாவும் அவரது நண்பர்களும் தாக்கி உள்ளனர். 
பின் அவர் கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப் பட்டார். அவரது காரில் நான்கு மது பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தற்போது அவரை கொல்லம் போக்குவரத்து போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி யுள்ளது.
Tags: