மருந்தின்றி சளியை விரட்ட வேண்டுமா?





மருந்தின்றி சளியை விரட்ட வேண்டுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
முழு ஆரோக்கி யத்துடன் இருக்கும் பொழுதும், உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். ஒரு நாளை க்கு , ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம் பானது உற்பத்தி செய்கிறது.

உதாரண த்துக்கு, தூசியோ, நமக்கு ஒவ்வாமை ஏற்படு த்தும் ஏதோ ஒரு பொருள், நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது, சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக் கடங்காமல் பெருகி விடுகின்றது.

அதாவது ,இந்த மாதிரி தருணங் களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிர ணுக்கள் (Mast cells ), ஹிஸ்டமைன் (Histamine ) என்ற வேதி பொருளை, வெளிப் படுத்து கின்றன.

இந்த ஹிஸ்டமைன் ஆனது, உடனே தும்மல், அரிப்பு, மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்ற தொரு உணர்வு, போன்ற வற்றை தூண்டி விடுகிறது.

இவ்வாறு தூண்டப் பட்டவுடன் சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட ஆரம்பிக் கின்றன. சளிப் பிரச்சனை யில் இருந்து விடுபட இயற்கை முறையில் மருத்துவ த்தினை பின் பற்றுவது நல்லது.

சளியை விரட்டு வதற்கான தீர்வை பார்க்க லாம்.

முதலில் மூன்று எழுமிச் சையை எடுத்துக் கொண்டு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு, ஒரு பாத்திர த்தில் இரண்டு கப் அளவு தன்ணீர் எடுத்துக் கொண்டு தேவை யான அளவு

உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். இப்பொழுது, இரண்டு கப் நீர் ஒரு கப் அளவிற்கு சுண்ட கொதிக்க வைத்த வுடன்
வெட்டி வைத்துள்ள எழுமிச் சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை, இரவு தூங்கு வதற்கு அரை மணி நேரம் முன்பு மிதமான சூட்டுடன் குடித்து விட்டு தூங்கி னால் உடம்பில் உள்ள சளி எல்லாம் வியர் வையாக வெளியேறி விடும்.

இதனை பின் பற்றினால் மருத்து வரை காண வேண்டிய அவசியமே இருக்காது.
Tags: