தம்பதியர் மீது துப்பாக்கிச் சூடு !

சென்னையைச் சேர்ந்த தம்பதியர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் முசாபர்நகர் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
தம்பதியர் மீது துப்பாக்கிச் சூடு !
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆதித்ய குமார்- விஜய லட்சுமி தம்பதி ஹரித் வாரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உத்தர கண்ட் செல்லும் வழியில் தாக்கப் பட்டுள்ளனர். 

முசாபர் நகரை ஒட்டிய தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண் டிருந்த போது, நேற்று மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகன த்தில் வந்த இருவர், அவர்களை துப்பாக்கி யால் சுட்டு ள்ளனர். 

இவர்க ளுடன் மற்றொரு இரு சக்கர வாகன த்தில் வந்த நண்பர் உடனடியாக தம்பதியை அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித் துள்ளார்.

கழுத்தில் குண்டடிப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவரும், காயங் களுடன் மனைவியும் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 
இது குறித்து விசாரித்து வரும் முசாபர் நகர் போலீஸார் கூறுகையில், ‘இத்தாக் குதல் தவறுதலாக ஆள்மாறி நடத்தப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். 

மேலும், இது நெடுஞ்சாலை கொள்ளையாகக் கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
Tags: