இங்கிலாந்தின் பாதாள நகரம் பர்லிங்டன் !

ஒரு நகரத்தை திட்டமிட்டு உருவாக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், பூமிக்கடியில் ஒரு நகரம் உருவாக்கப் பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது, வியப்பை ஏற்படுத்தும் அல்லவா?
இங்கிலாந்தின் பாதாள நகரம் பர்லிங்டன் !
அந்த பாதாள ரகசிய நகரம் இங்கிலாந்தின் பர்லிங்டன். 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்  பட்டது. 
அமெரிக்கா விற்கும் சோவியத் யூனியனி ற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதி காரிகள், ஊழியர் களைக் காப்பதற் காகவே இந்த நகரம் உருவாக்கப் பட்டது. 

அவசர காலங்களில் அரசு தலைமை யகமாகவும் இந்த நகரம் செயல்பட்டது. வெடி குண்டு களால் பாதிக்கப் படாத அளவுக்கு திட்ட மிட்டு அமைக்கப் பட்டிருந்த இந்த நகரத்தைப் பற்றி, அந்நாட்டு குடிமக்களு க்குக் கூட தெரிந்திருக்க வில்லை.

பூமிக்கடியில் உருவாக்கப் பட்ட இந்நகர த்தில் மருத்துவ மனைகள், உணவ கங்கள், அலுவல கங்கள், கிடங்குகள் என ஒரு நகரத்திற் குரிய அனைத்து வசதிகளும் இருந்தன. 
இவை தவிர குடிநீர் தேவைக் காக தற்காலிக மாக ஏரியும் உருவாக்கப் பட்டு இருந்தது. 

மற்ற பெரு நகரங்களைப் போல் அல்லாமல் பூமிக்கடியில் இயங்கிய இந்த நகரில், காற்றின் ஈரப்பதம் குறையாத வாறும் முன்னெச்ச ரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு இருந்தன.
ஏறக்குறைய 30 ஆண்டு களாக செயல்பட்டு வந்த இந்நகரம் அமெரிக்கா- சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தவுடன் 1991 ஆம் ஆண்டு பயன் பாட்டில் இருந்து விலக்கி வைக்கப் பட்டது. 

எதிர் காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டால் இந்நகர த்தை மீண்டும் புதுப்பித்து செயல்பட்டு கொண்டு வரும் திட்டத்தை பிரிட்டன் கைவசம் வைத்தி ருக்கிறது.
Tags: