என் தமிழ் மக்களுக்கு நான் நல்லது செய்ய கூடாதா? ரஜினி !

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக கருத்துகளை வெளியிட்டுள்ளார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப் படம் எடுத்துக் கொண்டார் நடிகர் ரஜினி காந்த்.
என் தமிழ் மக்களுக்கு நான் நல்லது செய்ய கூடாதா? ரஜினி !
கடைசி நாளான இன்று ரசிகர்க ளுடன் பேசுகை யில், நான் எது பேசினாலும் சர்ச்சை ஆகிறது, பேசா விட்டாலும் விவாதம் ஆகிறது.

ரசிகர்கள் மத்தியில் நான் பேசியது சமூக வலைத் தளங்களில் கீழ்த் தரமான வார்த்தை களால் விமர்சிக் கப்படும் போது வேதனை அளிக்கிறது. ரஜினி தமிழரா என்ற கேள்வி எழுகிறது, 

எனக்கு பெயர், புகழை கொடுத் தது தமிழனா க்கியது ரசிகர்கள் தான்.நான் பச்சை தமிழன், நீங்கள் எங்கு தூக்கி எறிந்தாலும் இமய மலையில் தான் வீழ்வேனே தவிர, வேறு எந்த மாநிலத் திற்கும் செல்ல மாட்டேன். 

என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வரக்கூடாதா? வேறு திறமையா னவர்கள் இல்லையா? இருக்கி றார்கள்.

ஸ்டாலின் எனது நண்பர், திறமை யானவர், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்.தொல்.திருமா வளவன் இலங்கை தமிழர்க ளுக்காக போராடி யவர், சீமான் நல்ல போராளி.
தமிழக த்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது, சிஸ்டம் நன்றாக இல்லை, அதனை சரி செய்ய மக்கள் சிந்தனை யில் தான் மாற்றம் வர வேண்டும். 

தொடர்ந்து பேசினால் சர்ச்சை யாகிறது என்பதால் தான் பேசுவதை தவிர்க் கிறேன், எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது.

உங்களு க்கும் குடும்பம், பொறுப்புகள் உள்ளது, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம், அது வரையிலும் பொறுமை யாக இருங்கள் என பேசி யுள்ளார்.
Tags: