குழந்தையை கடத்தியதாக நடிகை வனிதா மீது புகார் !

நடிகை வனிதா குழந்தையை கடத்திச் சென்ற தாக அவரது முன்னாள் கணவர் புகார் அளித் துள்ளார். நடிகர் விஜய குமாரின் மகள் வனிதா. இவர் டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார்.
குழந்தையை கடத்தியதாக நடிகை வனிதா மீது புகார் !
அவரை பிரிந்த பிறகு ஆனந்தராஜ் என்பவரை மணந்தார். இவர்க ளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. 2012ல் ஆனந்தராஜை அவர் விவாகரத்து செய்தார். 

குழந்தை யுடன் ஆனந்தராஜ் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலை யில் தனது குழந்தையை வனிதா கடத்தி விட்டதாக ஆனந்தராஜ் போலீசில் புகார் அளித்து ள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திடீரென எனது வீட்டுக்கு வந்த வனிதா குழந்தையை தூக்கி சென்று விட்டார். 
இது குறித்து ஐதராபாத்தில் போலீசில் புகார் அளித்து ள்ளேன். என்னிட மிருந்து குழந்தையை கடத்திய வனிதா சென்னைக்கு சென்று விட்டார் என்றார்.
Tags:
Privacy and cookie settings