திருட்டு வி.சி.டி பிடித்துக் கொடுத்தால் 1 லட்சம்... விஷால் !

நடிகர் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் விஷால். இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முன்பே அவர் திருட்டு வி.சி.டி-களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்.
திருட்டு வி.சி.டி பிடித்துக் கொடுத்தால் 1 லட்சம்... விஷால் !
குறிப்பாக, திருட்டு வி.சி.டி விற்பனை செய்யப் பட்ட கடை களுக்குச் சென்று அதிரடி காட்டினார் விஷால்.

இதை யடுத்து, தயாரிப் பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, திருட்சி வி.சி.டி விற்பனையாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தி ருந்தார். 

இந்நிலை யில், சென்னையில் இன்று நடந்த 'விளையாட்டு ஆரம்பம்' பட விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

விழாவில் விஷால் பேசுகையில், "தியேட்டரில் கேமரா வைத்து படத்தை காப்பி செய்து, திருட்டு வி.சி.டி தயாரிக்கும் கும்பலை அல்லது நபரை தியேட்டர் நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்து 
எப்.ஐ.ஆர் பதிவு செய்தால், சம்பந்தப் பட்டவரு க்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப் படும் என்றார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் பாலா, பேரரசு மற்றும் 'விளையாட்டு ஆரம்பம்' படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings