படிக்காத மேதையின் சம்பளம் 21 கோடி !

படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றில்லை, படிப்பறிவு இல்லாட்டால் கூட பரவா யில்லை, நாம் கற்றுக் கொண்ட அனுபவ அறிவின் மூலம் சாதனை நிகழ்த்தலாம் என நிரூபித் துள்ளார் தர்மபால் குலாத்தி.

படிக்காத மேதையின் சம்பளம் 21 கோடி !
94 வயதான இவர், இந்திய நுகர்பொருள் துறையில் அதிகச் சம்பளம் வாங்கு தலைமை செயல் அதிகாரி ஆவார். 

எம்டிஎச் மசாலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இவர், 5 ஆம் வகுப்பை கூட தாண்ட வில்லை.
5 ஆம் வகுப்பை கூட நிறைவு செய்யாத இவர் வாங்கும் ஊதியம் வருடத்திற்கு 21 கோடி ஆகும். 

ஊழியர்கள் அனைவராலும் தாதாஜீ அல்லது மஹாஷியாஜி என்று அழைக்கப் படும் குலாத்தி தினமும் நிறுவன த்தைச் சுற்றி வருவது, 

சந்தை விற்பனை யாளர்கள் மற்றும் டீலர்களை ஞாயிற்றுக் கிழமை என்றும் பார்க்காமல் சந்தித்துப் பேசுவது போன்ற வற்றைச் செய்வார். 

மேலும் நிறுவன த்தின் 80 சதவீத பங்குகள் இவருடைய கட்டுப் பாட்டில் மட்டுமே உள்ளது. 

நோக்கம் குறைந்த விலையில் நல்ல தரமான பொருட் களை அளிப்பதே எனது நோக்கம் என்றும் என்னுடைய சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் அறக் கட்டளைக்கு அளிப்ப தாகவும் தர்மபால் குலாத்தி கூறுகின்றார்.
கிளைகள் எம்டிஎச் நிறுவனத் திற்குத் துபாய், லண்டன் ஆகிய இடங்களில் அலுவல கங்கள் உள்ளது, 100 நாடுகளு க்கும் மேலாக ஏற்றுமதி செய்யப் படுகின்றது. 

60-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் எம்டிஎச் நிறுவனத்தில் தயாரிக்கப் பட்டு விற்பனைக்கு வெளி வருகின்றது. 

அதில் டேகி மிர்சி, சேட் மசாலா மற்றும் சன்னா மசாலா பாகெட்கள் ஒவ்வொ ன்றும் மாதத் திற்கும் 1 கோடிக்கு மேல் விற்பனை யாகி உள்ளது. ஆனால் இன்று வரை பிற வெளி நாட்டு உணவுகளைத் தயாரித்த தில்லை.
Tags: