ராமஜெயம் கொலை வழக்கு என்ன ஆச்சு?

எனது ஆட்சியில் தமிழக காவல்துறை, ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக விளங்குகிறது என அடிக்கடி சொல்வார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 
ராமஜெயம் கொலை வழக்கு என்ன ஆச்சு?
அவர் உயிரோடு இருந்த போது, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கொலை செய்யப் பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 

இது வரை கொலைக்கான காரண த்தைத் தமிழக காவல் துறையால் கண்டு பிடிக்க வில்லை என்பது தான் கொடுமை.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி, தில்லை நகர் பகுதியில் வாக்கிங் போன ராமஜெயம், திருவளர்ச்சோலை அருகே கைகால்கள் கட்டப்பட்டு பிணமாகத் தான் கண்டெ டுக்கப் பட்டார். 

தமிழகத்தில் மிகவும் பரபரப்பை உண்டா க்கிய இந்த வழக்கை முதலில், திருச்சி மாநகர போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். 

அடுத்து, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப் பட்டப் பிறகு, 12 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. ஆனாலும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால், எதுவும் கண்டு பிடிக்க முடிய வில்லை. 
இந்த நிலையில், கடந்த 10.12.2014 அன்று, ‘'ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’' என அவரது மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். 

ஆனால், சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த வழக்கை விசாரிப் பதற்காக இரண்டு வருடங் களுக்கு மேலாக, நீதிமன்றத்தில் கால அவகாசம் வாங்கி வருகின்றனர். 

இது தான் கடைசி என ஒவ்வொரு முறையும் எச்சரிக்கும் நீதிபதிகள், அவகாசம் வழங்கிக் கொண்டே இருக்கி றார்கள். இந்த வழக்கை விசாரிக்கும், நீதிபதிகள், இது வரை எட்டுப் பேர் மாற்றப் பட்டுள்ளார்கள். 

11 முறை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இறுதியாகக் கடந்த ஜனவரி 19-ம் தேதி, நீதிபதி கோகுல்ராஜிடம், '‘குற்றவாளி களை நெருங்கி விட்டோம்'' 

என ஏப்ரல் 19-ம் தேதி வரை மூன்று மாத கால அவகாசம் வாங்கி யிருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இன்று (29-03-17) ராமஜெயத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள். 
இதனை யொட்டி திருச்சி முழுவதும், இதய ஓவியமே, வாரி வழங்கிய வள்ளலே, அழியா வரலாறே, காவல் தெய்வமே, ஏழைகளின் சிரிப்பே என ராமஜெயம் நினைவாக, அவரது ஆதரவா ளர்கள் போஸ்டர்கள் ஒட்டி அதகளப் படுத்தி உள்ளனர்.

ராமஜெயம்

இது குறித்துப் பேசிய ராமஜெயம் ஆதர வாளர்கள், “ராமஜெயம் சாவுக்கு பல்வேறு கதைகளை போலீஸார் சொன்னார்கள். 

இன்று வரை, உண்மைக் குற்ற வாளியை போலீஸார் பிடித்த பாடில்லை. ராமஜெயம் உயிருடன் இருந்த போது ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜை காரோடு எரித்துக் கொன்ற தாகவும், 

அவரது அண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத் திலும் வீண் பழியை ராமஜெயத்தின் மீது சுமத்தி னார்கள். 

ராமஜெயம் இறந்த பிறகு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வேறு ஒரு வழக்கில் கைதானார். போலீஸ் விசாரணையில், புது தகவலைச் சொன்னார். 

துரைராஜை கொன்றதாக ஒப்புக் கொண்டார். கண்ணன் தற்போது சிறையில் இருக்கிறார்.  கண்ணன் மீதான வழக்கு இப்போது விசாரணைக்கு வந்துள்ளது. 
இதில், 80-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் கடந்த வாரம்முதல் விசாரணை நடப்பதால், ஒட்டு மொத்த திருச்சி சி.பி.சி.ஐ.டி டீமும் துரைராஜ் கொலை வழக்கிலேயே கவனம் செலுத்துகிறது. 

ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை காவல் துறை எந்த முன்னேற்ற த்தையும் காட்ட வில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸார், துறையூர் வெடிமருந்து தொழிற்சாலை விபத்துக்குப் பிறகு, அந்த வழக்கில் படு பிஸி. 

மேலும், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த திருச்சி சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி மலைச்சாமி ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகின்றன. 

இன்னும், அந்த இடத்துக்கு யாரும் வர வில்லை. மதுரை டி.எஸ்.பி ராஜேந்திரன்தான் பொறுப்பு வகிக்கிறார். 

இப்படியான விஷயங்களால் தான் ராமஜெயம் கொலை வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இதை, சி.பி.ஐ-க்கு மாற்றி யிருந்தால் கூட, அந்த வழக்கில் இந்நேரம் கொலை யாளிகள் பிடிபட்டிருப் பார்கள். 
ஆனால், கொலை யாளியை பிடிக்கவே கூடாது என்கிற நோக்கத்துடன் அ.தி.மு.கழக அரசு செயல் படுகிறது. இந்த அரசு இருக்கும் வரை ராமஜெயம் சாவுக்கு நீதி கிடைக்காது என்றனர்.

அடுத்த மாதம் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது கூட, சி.பி.சி.ஐ.டி போலீஸார் உண்மையை வெளியே கொண்டு வருவார்கள் என நம்பிக்கை யில்லை. 

சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்கின்றனர் ராமஜெயம் குடும்பத்தினர்.
Tags:
Privacy and cookie settings