ஒரு குட்டிக்கதை | A little story !

ஒரு கட்டுமான எஞ்சினியர்… 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… 


ஒருமுக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்க வில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்க வில்லை…
.
இவ்வளவுக்கும்… கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்…
.
ஆனால்சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு… கொத்தனார்  மும்முரமாக இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும் அப்படித் தான்….

மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவ தில்லை…  உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...

இறைவன் அவனுக்கு அருட் கொடைகளை அளிக்கின்றான்...

அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்ப தில்லை...

ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப்  பார்க்கின்றான்.

துன்பங்கள் வரும் நேரம்… இறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.
Tags: