மாணவிகள் நலனுக்காக கேரளா செய்த காரியம் !

இப்போ தெல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். பள்ளிகளில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை, தன்னுடன் இருக்கும் தோழிகளிடம் கூடப்பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டு வார்கள். 
மாணவிகள் நலனுக்காக கேரளா செய்த காரியம் !
மாதவிடாய் சுழற்சியை, பெரும் பாலும் பள்ளியில் இருக்கும் காலத்தில் சரியாக எந்தப் பெண்ணும் தெரிந்து கொள்வதில்லை. 

இதனால், மாதவிடாய் ஏற்படும் போது... அவர்களுக்குத் தேவைப்படும் நாப்கின்களை அவர்கள் வைத்திருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.

இதை, எங்கு... யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருப்பார்கள். இதை உணர்ந்த ஹெச்.எல்.எல். லைஃப் கேர் என்கிற நிறுவனம் நாப்கின்களை எடுக்கும், எரிக்கும் இயந்திரங்களை அறிமுக ப்படுத்தி யுள்ளது.

கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் இந்த வசதியை அறிமுகப் படுத்தியி ருக்கிறது அந்த நிறுவனம்.

ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட்!

ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட், இப்போது அரசு மற்றும் அரசு சார்ந்து இருக்கும் 150 பள்ளிகளில், பணத்தைச் செலுத்தினால் நாப்கின்கள் வரும்படி ஓர் இயந் திரத்தை பொருத்தி யுள்ளது.

வெண்டிகோ’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில், பணத்தைச் செலுத்தினால் 3 நாப்கின்கள் வரும். 
இது தவிர, பயன் படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் அகற்ற, ‘எரியூட்டு’ (incinerators) என்கிற இயந்திர த்தையும் அந்த நிறுவனம் பொருத்தியுள்ளது.

இந்த நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், கர்நாடகா மாநிலம் பெல்காம் என்ற ஊரில் இருக்கும் நிறுவனத்தில் தயாரிக்கப் படுகின்றன.

ஹெச். எல்.எல். நிறுவனம், சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச் சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 

அந்த நிறுவனம், மேலும் இது போன்று 700-க்கும் மேற்பட்ட இயந்திர ங்களை திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொருத்தி யிருக்கிறது.

ஸ்வச் பாரத் நகர்ப்புற மற்றும் நகர அபிவிருத்தி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அமைச்சகத்தின் அனுமதி யோடு... பள்ளிகளில் இந்த நாப்கின் வசதிகளும், எரியூட்டு வசதி களும் செய்யப் பட்டிருக்கின்றன.

விழிப்பு உணர்வு குறைவு!
நாப்கின்கள், பெண்களுக்குத் தேவைப்படும் அத்தியா வசியமான ஒன்று. அது, அவர் களைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. 

ஆனால், இந்தியாவில் மற்ற வளர்ச்சி அடையும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, இதற்கான விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது.

இன்றும் பல கிராமங்களில் பெண்கள் அவர்களுக்குத் தேவையான நாப்கின்களைக் கடைகளுக்குச் சென்று கேட்பதில் கூடத் தயக்கம் காட்டுகிறார்கள் என்றார் ஹெச்.எல்.எல் தலைவர் ஆர்.பி.கந்தல் வால்.

ஹெச். எல்.எல் நிறுவனம், கர்நாடகா பெல்காம்-ல் உள்ள நிறுவனத்தில் வருடத்துக்கு 400 லட்சம் நாப்கின்களைத் தயாரிக்கின்றன.

மேலும், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங் களிலும்... இதே போல பள்ளி களில் பெண்க ளுக்குப் பயன் படும் விதமாக நாப்கின் மற்றும் எரியூட்டு இயந்திரங் களைப் பொருத்தி யுள்ளது.
பெண்களு க்குத் தேவையான பல வசதிகளை அரசு செய்து கொண்டிரு க்கிறது. ஆனால், பல வசதிகள் இருப்பதை அவர்களுக்குத் தெரியப் படுத்தத் தவறி விடுகிறது. 

இன்றும் பெண்கள் பலர், மாதவிடாய் மற்றும் அதைச் சார்ந்த விஷ யங்கள் பற்றி வெளியில் பேசத் தயங்குகி றார்கள். 

கடைக்குச் சென்று நாப்கின் போன்ற வற்றை வாங்கி வரும் போது கூட பல பேப்பர்களைக் கொண்டு மறைத்து வாங்கி வருகிறார்கள். ஆண்கள், பெண்களின் மாத விடாய் பற்றி அறியாமல் இல்லை.

அனைவ ருக்கும் தெரிந்த விஷயங்களை எதற்காக மறைத்து வைக்க வேண்டும்? இனி யாவது பெண்கள், ‘மாதவிடாய்’ யை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர வேண்டும்.
Tags:
Privacy and cookie settings