நம்முடைய நிழல் நிறம் கருப்பு ஏன்?

நமது வாழ்வில் நம்மை பிற மனிதர்கள் பின் தொடர்கிறார்களே இல்லையே, நமது நிழல் நம்மை பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நம்முடைய நிழல் நிறம் கருப்பு ஏன்?
இருட்டிய நேரத்தில் நாம் சாலையில் நடந்து செல்கையில் நம்மை அறியாமலேய நமது நிழலை பார்த்து சில நேரத்தில் அச்சம் கொள்கிறோம்.

இவ்வாறு சில நேரங்களில் நம்மை அச்சம் கொள்ள வைக்கும் நிழல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !
நிழல் என்றால் என்ன?

ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது, அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர்.

நிழல் ஏன் கருப்பாக இருக்கிறது? 

நம்மில் பல பேர் நிழல் கருப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நிழல் கருப்பாக இல்லை, ஒளி அற்று இருக்கிறது.
இனி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம் !
ஒளி அற்றதை நாம் கருப்பு என்கிறோம், எல்லா நிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால் அது வெள்ளையாகப் புலப்படும், 

சில நிறங்கள் தனித்தோ, கலந்தோ இருக்கும் போது பல வண்ணங்கள் காணப்படும். நிசப்தம் என்பது சப்தம் இன்மை என்பது போல, கருமை என்பது நிறம் அல்ல, ஒளி இன்மை.
Tags: