நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் மூலிகை கண்டங்கத்தரி !

கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது என்று பொருள். மனிதனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுப்பவை கற்ப மூலிகைகள். 
நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் மூலிகை கண்டங்கத்தரி !
அவற்றில் ஒன்று தான் கண்டங்கத்தரி. கண்டம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்துவதால் இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர்.

‘சொலானம் சுரட்டென்ஸ்’ (Solanum surattense) என்பது கண்டங் கத்தரியின் தாவர வியல் பெயர். 

இது சிறுபஞ்ச மூல வகைகளில் (கண்டங்கத்தரி, சிறுவழு துணை, சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, பெரு மல்லிகை) ஒன்றாகக் கருதப்படுகிறது. செடி வகையைச் சேர்ந்த இது, எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. 

கண்டங்கத்தரியின் நோய் தீர்க்கும் குணம் பற்றியும் அதை எப்படிச் சேர்த்துக் கொள்வது என்பது பற்றியும் விரிவாக விளக்கு கிறார் சுப்ரமணிய புரம் அரசு சித்த மருத்துவர் அருண் குமார்.
பொசுங்கிப் போன நுரையீரலை சுத்தம் செய்ய !
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்திப் பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். 

இது கோழை அகற்றி யாகவும் சிறுநீர்ப் பெருக்கி யாகவும் குடல் வாயு அகற்றி யாகவும் செயல் படும்.தலையில் நீர் கோத்தல், சூலை நீர் எனப்படும் கபநீர், பித்த நீர் இவற்றைச் சீராக்கும்.
மேலும், தொண்டை யில் ஏற்படும் நீர்க்கட்டு, அடைப்பு, மூக்கில் நீர் வடிதல், சளி, மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு போன்ற பிரச்னை களில் இருந்தும் நிவாரணம் அளிக்க வல்லது கண்டங் கத்தரி.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப் பட்ட நோய் களைக் குணப் படுத்தும் வல்லமை கொண்டவை. 

கண்டங்கத்தரி, இண்டு, இசங்கு, தூது வளை, ஆடாதொடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலை களை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்துப் பொடியா க்கவும். 

இந்தப் பொடியைத் தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப் பட்ட அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.

கண்டங் கத்தரி கஷாயம்
நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் மூலிகை கண்டங்கத்தரி !
இண்டு, இசங்கு, கண்டங் கத்தரி, ஆடா தொடை, தூது வளை, துளசி இலை, வால் மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்துப் பொடிக்கவும். 

இந்தப் பொடியில் சரிபாதியை எடுத்து இரண்டு கோப்பை நீரில் கொதிக்க வைக்கவும். நீர் கொதித்து ஒரு கோப்பையாகச் சுண்டிப் போனதும் வடிகட்டி அருந்த வேண்டும். 

இதே போல் மற்றொரு பங்கை மாலையில் காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்ற வற்றுக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.

கண்டங் கத்தரி விதையைக் காய வைத்து எரிக்கும் போது வரும் புகையை வாய்க்குள் அடக்கினால் பல் வலி நீங்கும். வாயில் உள்ள கிருமிகள் அழியும்.
பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் உணவுகள் !
கசப்புத் தன்மை கொண்ட கண்டங் கத்தரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருமல், சளி குணமாவதோடு, வயிற்றில் உள்ள கிருமிகளும் நீங்கி நன்கு பசி எடுக்கும். 
இக்காய்களை வற்றல் செய்தும் சாப்பிடலாம். கண்டங்கத்தரிப் பழங் களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு (உடல் இளைத்தல்) நீங்கி உடல் வலிமை அதிகரிக்கும். 

மேலும், பல் அரணை மற்றும் தோல் நோய்களையும் குணப்படுத்தும். 

பழத்தைக் காய வைத்துப் பொடித்து தேனில் கலந்து காலை, மாலை என இரு வேளை கொடுத்து வரக் குழந்தை களுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கண்டங்கத்தரிப் பழத்தைக் கொதிக்கும் நீரில் குழையவைத்து வடிகட்டிய பின் நான்கு பங்குக்கு ஒரு பங்கு சுரை விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி ஆறவிட்டு காதுக்குள் விட காது வலி நீங்கும்.

கண்டங் கத்தரி இலைச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்து வந்தால், தலைவலி, கீல் வாதம், அக்குள் நாற்றம் ஆகியவை சரியாகும். 
நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் மூலிகை கண்டங்கத்தரி !
கண்டங் கத்தரி இலைச் சாறுடன் ஆளி விதை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிக் கால் வெடிப்பு களில் பூசிவர வெடிப்புகள் விரைவில் குணமாகும்.

வேர் 30 கிராம், சுக்கு ஐந்து கிராம், சீரகம் இரண்டு சிட்டிகை, கொத்த மல்லி இலை ஒரு பிடி ஆகிய வற்றை இரண்டு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். 

100 மி.லி. அளவு வீதம் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு முறை குடித்து வர சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல் மற்றும் நுரையீரல் சம்பந்தப் பட்ட காய்ச்சலும் குணமாகும்.
அரேபியர்கள் உண்ணும் குப்புஸ் ரொட்டியுடன் வளைகுடா வாழ்க்கை !
கண்டங் கத்தரி நீர்

கண்டங் கத்தரி வேர், ஆடாதொடை வேர் தலா 40 கிராம், உடைத் தெடுத்த அரிசித்திப் பிலி 5 கிராம் ஆகிய வற்றை இரண்டு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வரும் வரை சுண்டக் காய்ச்சவும். 

100 மி.லி.வீதம் தினம் நான்கு வேளை குடிக்க இரைப்பு இருமல் (ஆஸ்துமா), எலும் புருக்கி (க்ஷயம்) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் ஆகியவை தீரும்.”
Tags: