எந்த படத்தையும் ஏற்காமல் மஞ்சள் பட ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகை சசி !

சத்ய சரவணா இயக்கியுள்ள படம் மஞ்சள். புதுமுக நாயகன் திரு நடித்துள்ள இந்த படத்தில் சசி நாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் சிங்கம் புலி காமெடியனாக நடித்திருக்கிறார். 
எந்த படத்தையும் ஏற்காமல் மஞ்சள் பட ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகை சசி !
சில மாதங்களு க்கு முன்பே ஆடியோ வெளியான இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. 

அதன் காரணமாக அந்த படத்தில் நாயகியாக அறிமுகமா கியிருக்கும் நடிகை சசி எந்த புதிய படத்தையும் ஏற்காமல் மஞ்சள் படத்திற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சசி கூறுகையில், மஞ்சள் படத்தில் கிராமத்து நாயகியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தின் கதை என்னைச் சுற்றி பின்னப் பட்டிருக்கிறது. 

அதனால் முதல் படத்தி லேயே அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்திரு க்கிறேன். 

அதற்கெல்லாம் மேலாக, கிராமத்து பெண்ணாக என்னை முழுமையாக மாற்றிக் கொள்ள எனது உடம்பு முழுக்க கறுப்பு கலர் மேக்கப் போட்டு நடித்தேன். 

அதையடுத்து கண்ணாடி முன்பு நின்று பார்த்த போது எனக்கே என்னை அடையாளம் தெரிய வில்லை. 
அதே சமயம் அந்த கிராமத்து கதாபாத்தி ரத்திற்கு பொருத்தமாக இருப்பதாக அனைவரும் சொன்னார்கள். 

அதனால் முழு ஈடுபாடு காட்டி மஞ்சள் படத்தின் டித்திருக் கிறேன். ஆனால், எதிர் பார்த்தபடி அந்த படம் திரைக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு தான் வெளியா கும் என்கிறார்கள். 

அதனால் என்னைத் தேடி சில புதிய படங்கள் வந்த போதும் அந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை. காரணம், மஞ்சள் படத்தில் நான் நடித்தி ருப்பதை மற்ற டைரக்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
அப்போது தான் எனக்கு வெயிட்டான நாயகி வேடம் தருவார்கள்.அது இல்லாமல் நான் இப்போதே புதிய படங்களில் நடித்தால் என்னை சாதாரணமான வேடங்களில் நடிக்க வைத்து விடுவார்கள்.

அதனால் தான் மஞ்சள் படம் வெளியான பிறகு புதிய படங்களில் கமிட்டாக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் நடிகை சசி.
Tags:
Privacy and cookie settings