இனி 10 வருஷத்துக்கு நாமதான் கிங் சச்சின் !

அடுத்த பத்து வருடங் கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆதிக்கம் தொடரும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரி வித்தார். 
இனி 10 வருஷத்துக்கு நாமதான் கிங் சச்சின் !
இந்தியா தனது 500வது டெஸ்ட் போட்டியில் இன்று நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

கான்பூரில் நடை பெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டியை நேரில் காண சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சச்சின் அளித்த பேட்டியில் இப்படி கூறி யுள்ளார்: இந்திய கிரிக்கெட் அணி இளைஞர் களால் நிரம்பி யுள்ளது. மிகச்சிறந்த அணியா கவும் உள்ளது.

அனைத்து வகை திறமை களையும் ஒருங்கே கொண்ட அணியாக இந்தியா உள்ளது. இளம் வீரர்கள் நாள்பட, நாள்பட இன்னும் பக்குவப்ப டுவார்கள். 

அது இந்திய டெஸ்ட் அணியை வலுப் படுத்திக் கொண்டே இருக்கும். 

வீரர்களின் வயதை வைத்து பார்க்கும் போது, அடுத்த எட்டு முதல் 10 வருடங்களுக்கு இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் அரங்கில் தனது ஆதிக்கத்தை தொடரும் என்று கணிக்க முடிகிறது என்றார்.
முன்னதாக கோஹ்லி கூறுகை யில், 500வது டெஸ்ட் போட்டிக் கான இந்திய அணியின் கேப்டனாக இருப்பது பெருமையாக உள்ளது. 

மேற்கிந்திய தீவுகளில் சிறப்பாக டெஸ்ட் போட்டி களை ஆடினோம். அன்த நம்பிக்கை யோடு நியூசிலாந்த எதிர் கொள்கி றோம் என்றார்.
Tags:
Privacy and cookie settings