காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை !

கோவையில் காதலிக்க மறுத்த தால் தன்யா (23) என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை !
கோவை அன்னூரை சேர்ந்தவர் தன்யா (23). இவரை கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து 2 வருடங்களாக தன்யாவை காதலித்து வந்துள்ளார். தன்யாவுக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

இந்த நிலையில் அவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். 

தன்னை தன்யா காதலிக்க மறுத்த தால் இளைஞர் ஒருவர் இந்த செயலில் ஈடுபட் டுள்ளார் என்றும், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:
Privacy and cookie settings