காருக்குள் புகைபிடித்தல்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

காருக்குள் அமர்ந்து புகைப் படிக்கும் போது உள்ளி ருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப் பட்ட அளவுகளை விட அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


காரின் ஜன்னல் கண்ணாடி களை திறந்து வைத்துக் கொண்டு புகை பிடித்தாலும், காரில் ஏசியை ஓட விட்டுக் கொண்டு புகை பிடித்தாலும் கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருக்கிறது என்று அவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள் உடல் நலம் காரின் முன்னி ருக்கையில் அமர்ந்து ஒருவர் புகைக்கும் போது பின்னால் அமர்ந் திருக்குக்கக் கூடியவர் களை இந்த நச்சுப் பொருட்கள் பாதிக்கும் என அவர்கள் அறிவுறுத் துகின்றனர். 

புகைக்கும் போது காருக்குள் காற்றில் நச்சுப் பொருட்களை அளவை 85 கார்ப் பயணங்களில் கணக்கிட்டு ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள்

இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள தாக டொபாக்கோ கண்ட்ரோல் ஜர்னல் என்ற புகைப் பழக்க ஒழிப்பு விழிப்புணர்வு சஞ்சிகை கூறுகிறது. 

காருக்குள் அமர்ந்து புகை பிடிப்பதற்கு தடையைக் கொண்டு வர வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கழகம் விரும்புகிறது.


குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

"காருக்குள் புகைப் பிடிப்பவர் களால் மிக அதிகமாகப் பாதிக்கப் படுபவர்கள் பின்னால் அமர்ந்தி ருக்கின்ற குழந்தைகள் தான்.

ஏனென்றால் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் அதிக தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுபவர்கள் ஆவர், மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு கட்டமைப்பு முழுமையாக வளர்ச்சி யடைந்திருக்காது. 

எனவே மற்றவர்கள் விடுகின்ற புகையை சுவாசிப்பதால் இவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு அதிகம்", என அபர்டீன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷான் செம்பிள் கூறுகின்றார்.
Tags:
Privacy and cookie settings