தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குதல் !

தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரி த்து வரும் பிரச்சனை யாக இருக்கிறது. 
தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குதல் !
குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை தூக்க மின்மை கோளாறி னால் அவதிப்படா தவர்கள் இல்லை எனவே கூறலாம்.

கடைசி யாக நாம் குடும்ப மாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆக வேண்டிய கட்டாய த்தில் இருக்கிறீர்கள்.

தலைவலியை போக்கும் அருமருந்து வெந்நீர் !

பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்து விட்டு தூங்கியது தான் வழக்க மாக இருந்தது.

ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 - 10 மணிக்குள் தான். போதாக் குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு..

24X7 மொபைல் மற்றும் இணைய த்தில் அதிகமாக நேரம் செலவிடுவது, பொழுது போக்காக இருப்பினும், 
வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது.

இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் நிரந்தர பயனளிக்காது. 

நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய மானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும்.

மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.
இதற்கான நல்ல உறக்க த்தை பெறுவதற் கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. 

ஆம், தினமும் உறங்க செல்வ தற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்து விட்டு உறங்குங்கள்.
பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல் பாட்டை ஊக்க வித்து, தூக்கமின்மை கோளாறை சரி செய்ய உதவு கிறது.

பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும்.
பூண்டு, சளி தொல்லை, தமனிக ளில் ஏற்பட்டிரு க்கும் தடைகள் / அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மை கள் புரிந்து உதவுகிறது.

நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை / கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
Tags:
Privacy and cookie settings