ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா? சரஸ்வதி !

சிகிச்சைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வதாகக் கூறப்படும் தகவல் வதந்தி என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.
ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா? சரஸ்வதி !
சென்னை யில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு தெரிவித்த அவர், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலத்துடன் உள்ளார். தொண்டர்கள் கவலை அடைய வேண்டாம். 

முதலமைச்சர் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினார். முன்னதாக திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும், ஆனாலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் தொடர்ந்து இருந்து வருகிறார் 

என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வதாக தகவல் பரவியது. இதனால் அதிமுகவி னர் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில், சிகிச்சைக்காக முதலமைச்சர் சிங்கப்பூர் செல்வதாகக் கூறப்படும் தகவல் வதந்தி என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி விளக்கம் அளித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings