அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட் பூங்குன்றன் !

ஜெ-வின் கோபப் பார்வையில் சிக்கியுள்ள அடுத்த நபர் பூங்குன்றன் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன. 
அதிமுகவில் விழுந்த அடுத்த விக்கெட் பூங்குன்றன் !
போயஸ் கார்டனில் கோலோச்சி வந்த ஜெயலலி தாவின் உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிக்கப்பட்டு விட்டதாக நம்பத் தகுந்த வட்டார ங்கள் கூறுகின்றன. 

அவரை ஜெயலலிதா விடுமுறை எடுத்து கொண்டு போக சொல்லி விட்டதாகவும் அவருக்கு பதில் கார்த்தி கேயன் என்பவரிடம் உதவியாளர் பணி கொடுக்கப் பட்டிருப்ப தாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா விடம் நேரடியாகப் பேசக்கூடியவர். கார்டனுக்கு வரும் புகார்களை ஜெயலலிதா கவனத் துக்குக் கொண்டு சேர்க்கும் பணி ஆகியவை பூங்குன்றன் வசம் இருந்தது. 

ஆனால் இவர் கடந்த சில நாட்களாக மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களை முறையாகக் கொண்டு சேர்க்க வில்லை என்றும், 
சசிகலா புஷ்பா விவகாரத்தில் இவரும் சம்பந்தப் பட்டிருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இதனால் இவருடைய விக்கெட்டும் அதிமுகவில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
Tags: