6 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் மகன் !

குஜராத்தின் சூரத் நகரத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஷிவ்ஜி தொல்லாக்கியா, ஒரு வைர வியாபாரி. இவர் 71 நாடுகளில் வைர தொழில் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி. 
6 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் மகன் !
இவரது 21 வயது மகன் தார்வயா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து முடித்துள்ளார். மிகவும் செல்வ செழிப்புடன் வளர்ந்த தன் மகன் தார்வயா, வாழ்வின் கஷ்டங்களையும், வறுமையும், 

வேலை கிடைப்பதன் சிரமத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு மாதம் தனியாக வேலை தேடி, அதை வைத்து பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார் தந்தை ஷிவ்ஜி.
மகனும் தந்தையின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, கேரளாவிற்கு வந்து வேலை தேடியுள்ளார். ஆனால் 60-க்கு அதிகமான இடங்களில் நிராகரிக்கப்பட்ட பிறகு அவருக்கு பேக்கரி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

அவசர தேவைக்காக தனது தந்தை கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் ஒரு மாதத்தை வெற்றிகரமாக கழித்து விட்டார். பேக்கரி மற்றும் மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்து இந்த ஒரு மாதத்தில் ரூ.4000 ஊதியமாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில் பேக்கரியில் வந்த ஒரு நபர் தமது நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி அழைத்துள்ளார். தார்வயா குறித்து எதுவும் தெரியாமல் வேலை தர வேண்டாம் என அவரது நண்பர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் தார்வயாவின் பணிவும் சுறுசுறுப்பும் பிடித்துப் போகவே அந்த நபர் தனது நிறுவனத்தில் வேலை வாங்கி தந்துள்ளார்.

இதனிடையே தார்வயாவின் சொந்த நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட அந்த நபருக்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. 

மட்டுமின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவருக்கு அந்த நபர் விளக்கிய போது, வேலை வாங்கி தந்த நபருக்கு வியப்பு மேலோங்கியது.
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி - Vitamin D !
இந்த ஒருமாத காலத்தில் தான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம், மற்றவர்களிடம் கரிசனத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தான். 

பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களிடம் நாம் கடினமாக நடந்து கொள்கிறோம் என்று தார்வயா தெரிவித்துள்ளார்.
Tags: