காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது !

காது, மூக்கு, தொண் டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணி காந்த் பதிலளிக்கிறார்.
 
நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்ப றையில் மாண வர்களின் கேலிக்கு ஆளாகி விடுகிறேன். 

இதை சரிசெய்ய முடியுமா? 

மூக்கு முதல் குரல் நாண் வரை அடைப்போ அல்லது குறுகலாவோ இருந்தால் சில விதமான சப்தங்கள் வரலாம்.

எந்த பகுதியில் அடைப்பு உள்ளது என்பதனை பொறுத்து தான் தெளிவாக கூறமுடியும். இதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை இதனை எளிதாக சரி செய்ய இயலும்.

காது கேளாமை என்பது பிறவி கோளாறா? மரபணு கோளாறா அல்லது விபத்து, அதிர்ச்சி போன்ற வற்றால் ஏற்படுகிறதா? 

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று காரண ங்களாலும் காது கேளாமை, கேட்டலில் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

பாதிப்புகளின் அளவை பொறுத்து அறுவை சிகிச்சை மூல மாகவோ அல்லது செயற்கை காது கேட்கும் கருவியை பொருத்தியும் இதனை சரிசெய்யலாம். சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பெஸ் என்ற சிகிச்சை பரிந்துரைக்க ப்படுகிறது. 
இதன் பலன் என்ன யாருக்கு பொருந்தும்? 

பொதுவாக இந்த அறுவை சிகிச்சை இ.எஸ்.எஸ் என்று கூறப் படுகிறது. காதில் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப் பட்ட வர்களுக்கு இந்த சிகிச்சை செய்ய ப்படுகிறது. 

மருந்துகள் மூலம் பலன் இல்லாவிடில் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து செய்யப் படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட யாருக்கு வேண்டு மானலும் இந்த சிகிச்சை செய்யலாம்.

காதில் எதனால் சீழ் வடிகிறது? இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? 

காதில் சீழ் வடிவத ற்கான காரணத்தை கண்டறிந்து தான் முறையான சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். இது ஆரம்ப கட்டத்தில் இருப்பின் மருந்து மாத்திரை களால் குணப் படுத்த இயலும்.

காதில் சீழ் வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரை க்கும் நாட்கள் வரை மருந்து களை உட்கொள்ள வேண்டும்.
மூக்கு தண்டு வடபாதிப்பு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ், அண்ண சதைப் பிரச்னை போன்ற தொல்லை களும் உடனிருந்து காதில் சீழ் வடிவது நெடுநா ளாக இருந்தால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். 

ஒரு சிலருக்கு காதில் இருக்கும் சவ்வு கிழிந்து கூட சீழ் வரலாம். இவர்களுக்கு அதற்கான அறுவை சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். 

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனரே சரியா? 
வேக்ஸ் எனப்படும் திரவப்பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் ஒரு சிலருக்கு திடப்பொ ருளாக மாறி கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தங்கி விடுகிறது. 

குளிக்கும் போது இயல்பா கவே வெளிவந்து விடுகிறது. ஒரு சிலருக்கு இது வெளி வராமல் கட்டி போன்று ஆகிவிடுகிறது. இவர்கள் மட்டும் மருத்து வர்களை அணுகி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதனை தாமாக சுத்தம் செய்வது காதுகளின் உட்ப குதிகளில் பாதிப்பு களை ஏற்படு த்தி விடுகிறது. காதுகளில் சோப்பு தண்ணீர், உடலில் தேய்த்துக் குளிக்கு ம் மாவு போன்றவை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
மூக்கடைப் பிற்காக பயன் படுத்தப் படும் ஸ்பிரேவின் காரணமாக புற்று நோய் ஏற்படுமா? 
 
இல்லை, அதன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை. பொதுவாக ஸ்பிரே இரண்டு வகை களில் உள்ளது. ஸ்டிராய்டு, அலர்ஜி, சதை வளர்ச்சி போன்றவற் றுக்காக

பயன் படுத்தப் படும் ஸ்பிரே வகைகள், மற்றொன்று சளிக்காக பயன் படுத்துவது. முதல் வகையை மருத்து வரின் பரிந்து ரையின் பேரில் தொடர்ந்து பயன் படுத்தலாம். 
இரண்டாம் வகையை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கு அடிமையாகி விடுவோம். அதை தவிர புற்றுநோய் என்பது மூக்கு பொடி பயன்படு த்துவதால் வரலாம்.

கர்ப்ப காலத்தின் போது காது, மூக்கு, தொண்டை, ஆகிய பகுதிகளில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான மருந்து களை உட்கொள்ளக் கூடாது என்று கூறுகி ன்றனரே ஏன்? 

காது, மூக்கு, தொண்டை மட்டும் அல்ல கர்ப்ப காலங் களில் எவ்வித மருந்துக ளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். மருந்து எடுக்கும் போது அது நேரடியாக கருவில் உள்ள கருவை பாதிக்கும். 

மருந்துவரின் ஆலோச னையின் பேரில் மருந்து களை எடுத்துக் கொள்ளலாம். நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். என் தொழில் காரணமாக அதிகபட்ச நேரம் நான் செல்போன் பயன்ப டுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இயர் போன் மூலம் பேசினால் பாதிப்புகளை தவிர்க்க முடியுமா? 
செல்போன் பயன் பாட்டின் மூலம் இதுபோன்ற பாதிப்பு வரும் என்பதை உறுதியாக கூற இயலாது. இது பற்றிய ஆய்வு எதுவும் இன்னும் முழுமை யடைய வில்லை.

சிறு வயதிலேயே கர்ப்பமான ஷகிலா... தாய் செய்த காரியம் தெரியுமா?

ஆனால், அதிக நேரம் செல் போனில் பேசுவது கட்டாயம் கேட்கும் தன்மையை குறைத்து பாதிப்பு களை ஏற்படுத்தி விடும். சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். இதில் இயர் போனை அதிகம் பயன்படுத் துவதை தவிர்த்து விடுங்கள். 

அப்படியே பயன்படு த்தினாலும் ஒலி அளவை குறைத்து வைத்துக் கொள்வது பாதிப்பு களை குறைக்கும்.
Tags: