அலைபேசியில் வரம் குரல் சொல்லும் லீலை !

அது கேட்கப் படுகிறது
நாம் கேட்கிறோம்
அத்தனை வன்மத்துடன்
அவ்வளவு பிடிவாதமாக
அப்படி ஓர் உடைந்த குரலில்
யாரும் அதற்கு பதிலளிக்க
விரும்பாதபோதும் - மனுஷ்யபுத்திரன்

திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள்.


அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது.

எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்கும்.

அந்த தொல்லை தாங்க முடியாமல் அலை பேசியை ஆப் செய்து விட்டாள்.

அவள் வேலை செய்யும் தனியார் ஹெல்ப் லைனுக்கே இதே விதமான அழைப்பு வர ஆரம்பித்தன.

யாரோ ஓர் ஆண் செய்யும் சில்மிஷ வேலை தான் என்பது மட்டும் திவ்யஸ்ரீக்கு புரிந்தது.

அவளுடைய மேலதிகாரிக்கு இந்தப் பிரச்னையை வேறு வழியின்றி சொன்னாள். 

அவர் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்காமல் வேலையை விட்டு நின்று கொள்வதாக தெரிவித்தாள்.

இப்படி பெண்களுக்கு போன் செய்து தொல்லை தருபவர்கள் யார்? 

எந்த நோக்கத்துக்காக செய்கிறார்கள்? பெண்களுக்கு போன் செய்து பேசி,

அதன் மூலம் தனது செக்ஸ் ஆர்வத்தை பூர்த்தி செய்து கொள்பவர்கள் தான் இக்காரியங் களில் ஈடு படுகிறார்கள்.

இவர்களை Phone Sex Abusers என அழைப்போம். உலகில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனம் போன்.

தகவல் தொடர்பு முதல் பொழுது போக்கு வரை ஏதேனும் ஒரு தேவைக்காக போனை பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் போனை தவறான விஷயங் களுக்கு தான் பயன்படுத்து கிறார்கள் என்கிறது ஒரு சர்வே.

பொதுவாக ஆண்கள் தான் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகி றார்கள்.


பெண்கள் தான் இந்தப் பிரச்னையில் அதிகமாக பாதிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு வகை கிக், திரில்லுக் காக இம்மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிகம்.

வெறுமனே பெண்களின் குரலைக் கேட்பதன் மூலம் செக்ஸ் உணர்ச்சி களை அடைபவர் களும் இருக்கிறார்கள்.

இப்படி பேசிக் கொண்டி ருக்கும் போதே சுய இன்பத்தில் ஈடுபடு பவர்களும் உண்டு. 

சிலர் ‘உன்னை விரைவில் மீட் பண்ணுவேன்’ என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால், நேரில் வர மாட்டார்கள். சிலர் மார்பு, உதடு போன்ற அங்கங்களை வர்ணித்து பேசுவார்கள்.

ரேப் செய்யப் போவதாகக் கூட மிரட்டுவார்கள். பெண்களிடம் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டுவதில்

கிடைக்கும் சந்தோஷம் இவர்களுக்கு இப்படி போன் கால் செய்வதில் கிடைக்கிறதாம். 

இதனால் இவர்கள் ஒருவித கிளர்ச்சி மனநிலையை அடைகிறார்கள்.

தங்களுக்கு ஓர் அதிகாரம் இருப்பதாக செயற்கை யாக நினைக் கிறார்கள். 

இவர்கள் Coward எனப்படும் கோமாளி வகையைச் சேர்ந்தவர்கள்.

நேரில் பேச தைரியம் இல்லாமல் தான் போனில் பேசிக்கொண்டு அலைகிறார்கள்.

இவர்களை கண்டு பயப்படாமல் எதிர் கொண்டாலே ஓடி விடுவார்கள்.

இப்படி ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசுவதை Symbolic Rape எனவும் அழைப்பார்கள்.

தொண்டு நிறுவனங் களில் தகவல்கள் சொல்வதற்காக வேலை செய்யும்,

டெலிபோன் ஹெல்ப் லைனில் வேலை பார்க்கும் பெண்கள் தான் இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

பிடிக்காத பெண்களை டார்ச்சர் செய்யக் கூட இப்படி போனில் பேசுபவர் களும் உண்டு.

 அந்நியர் போன் செய்தால், தொடர்ந்து அவர்களிடம் பேசக்கூடாது.

சந்தேகம் வந்தால் போனை கட் செய்து அந்த நபர் மீது கஸ்டமர் கேரில் புகார் கொடுங்கள்.


ஹெல்ப் லைனில் வேலை செய்யும் பெண்களுக்கு இத்தகைய கால்கள் வந்தால் 

அதை மேலதிகாரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விட்டு முறையாக புகாரையும் பதிவு செய்யுங்கள்.

டெலிபோன் பயன்படுத்து பவர்கள் காலர் ஐடியை போனில் இணையுங்கள். 

இதன் மூலம் கால் செய்யும் நபரின் முகவரியை எளிதாக கண்டு பிடித்து விடலாம்.

நம்பரையும் நபரையும் கண்டறிந்து போலீசில் புகார் செய்தால் அவர்கள் தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள்.
Tags:
Privacy and cookie settings