கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !





கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கொஞ்ச நாட்களாகக் கழுத்தில் லேசாக வலி இருந்தது. அது திடீரென்று அதிகரித்து மிகவும் மோசமாகித் தோள் பட்டையின் குறிப்பிட்ட பகுதி முழுக்க மரத்துப் போனது போலாகி விட்டது.
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. இது எலும்புத் தேய்மான நோயாக இருக்குமா? - மகேஷ்குமார், கோயம்புத்தூர்

நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளை வைத்துப் பார்த்தால் இது Cervical spondylosis பிரச்சினை என்று தெரிகிறது. இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலருக்கும் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது.
வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?
கழுத்தெலும்பு அதிகம் பயன்படுத்தப் பட்டுவந்தால் இது ஏற்படுகிறது. கழுத்தில் இரண்டு எலும்பு களுக்கிடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. 

சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக் கொள்ளும். இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்தி லிருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். 

சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப் படலாம். இந்த நேரங்களில் கை மட்டு மல்லாமல் காலும் பாதிக்கப் படலாம்.
தினமுமே இவ்வாறு கழுத்தைத் தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படலாம். அதிக வேலைப்பளு உள்ளவர்கள், விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துபவர் களை இது பாதிக்கலாம்.

வயது ஆகஆக இது அதிகரிக்கும். 60 வயது ஆகும்போது அனைவருக்குமே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால், கழுத்தெலும்பு தேய்மானம் காணப்பட வாய்ப்பு உண்டு.

இது அல்லாமல் வேறு சில காரணங் களாலும் கழுத்தெலும்புத் தேய்மானம் ஏற்படலாம். அதிகமாக உடல் பருமனுடன் இருப்பது, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது,

கனமான பொருட்களைத் தூக்குவது, கழுத்தை அடிக்கடி முன் பின் அசைப்பது, வளைப்பது, கழுத்தில் அடிபடுவது, சிறு வயதில் அடிபட்டுக் கவனிக்காமல் விட்டு விடுவது,
நகம் பெயர்ந்தால் என்ன செய்வது தெரியுமா?
கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கிற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர் வருவது, கழுத்தில் கனத்தன்மை குறைகிற osteoporosis எனும் நோய் தோன்றுவது போன்றவை அந்தக் காரணங்கள்.
(nextPage)
தேய்மான அறிகுறிகள்
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
இந்த நோய்க்கான அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும். சில நேரம் திடீரென்று கடுமையான வலியை உண்டாக்கும். வலி லேசான தாகவோ, கடுமையான தாகவோ இருக்கும். கழுத்தை அசைக்க முடியாமல் போகும். 

சிலருக்குக் கழுத்து வலி, தோள்பட்டை வரை பரவலாம். நின்று கொண்டிருந் தாலோ, உட்கார்ந்து கொண்டிருந்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிரித்தாலோ, கழுத்தைப் பின் பக்கமாக வளைத்தாலோ, நடந்தாலோ வலி கூடும்.
(getCard) #type=(post) #title=(You might Like) 
கை தசைகளில் பலம் குறையும். கையைத் தூக்குவதில் சிரமம் ஏற்படும். துணியைப் பிழிவதில் சிரமம் ஏற்படும். கைகளில் தசைகள் இறுகிப் போகும். கைகளில் மரத்துப் போகும் தன்மை ஏற்படும்.

சிலருக்குத் தலைவலி ஏற்படலாம். நடக்கும்போது தள்ளாட்டம் வரலாம். பதற்றமான சூழ்நிலைகளில் சிறுநீர், மலம் கட்டுப்பாடின்றிப் போகும். தண்டுவடம் பாதிக்கப் பட்டிருந்தால் இவ்வாறு வரும்.

பரிசோதனை முறைகள்
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
மருத்துவர் கழுத்தை முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அசைக்கச் செய்து இந்த நோயைக் கண்டறிவார். வலுக் குறைவு, உணர்ச்சிக் குறைவு இருக்கிறதா என்று பார்ப்பார்.
நிர்வாண வீடியோவை காட்டி பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய அதிமுக பிரமுகர் !
கழுத்துப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார். தேவைப்பட்டால் MRI, EMG, nerve conduction study எடுப்பார். பிசியோதெரபி செய்யச் சொல்லுவார். தசைகளுக்கு வலுவூட்டுகிற பல பயிற்சிகள் உள்ளன. அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு செய்ய வேண்டும். 

மசாஜ் இதற்கு ஒரு சிறந்த சிகிச்சை. அக்குபங்சர் போன்ற சிகிச்சைகளைச் சிலர் செய்வதுண்டு. நவீன மருத்துவத்தில் ஆரம்ப நிலையில் வலியைக் குறைப்பதற்கு ஐஸ் சிகிச்சையும், உஷ்ணமான சிகிச்சையையும் மாற்றி மாற்றிச் செய்வார்கள்.

வலி நிவாரணிகளைத் தற்காலிக மாகக் கொடுப்பார்கள். அபூர்வமாகத் தண்டுவடம் அழுத்தப் பட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும். 
சாதாரணமாக இதை லகுவாகச் சமாளித்து விடலாம். மலம் மற்றும் மூத்திரம் போவதைக் கட்டுப்படுத்த இயலாமை, தசைகள் இயங்குவதில் கஷ்டம், நடப்பதில் கஷ்டம் இருந்தால் சிகிச்சை செய்வதற்குக் கடினமாகும்.
(nextPage)
ஆயுர்வேதச் சிகிச்சை முறை
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
கழுத்துப் பகுதி கபம் சார்ந்த பகுதி. இங்கு வாதம் சேர்கிறபோது தேய்வு வருகிறது. தசை பிதுங்குகிறது. நரம்பு மரத்துப் போகிறது. வாதமும் குளிர்ச்சியானது. கபமும் குளிர்ச்சியானது.

இங்கு உஷ்ணமான சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். இதைக் கிரீவாகிரஹம் என்றும், கிரீவா குண்டனம் என்றும் அழைப்பார்கள். கழுத்து வலி நீங்குவதற்குச் சிற்றரத்தை பற்று, கொள்ளு பற்று, மூசாம்பரம் பற்று போன்ற பற்றுகளைப் போடுவார்கள்.

அதன் பிறகு கொட்டம் சுக்காதி எண்ணெய், பருத்தி எண்ணெய் என்ற கார்ப்பாஸாஸ்தியாதி எண்ணெய், சிஞ்சாதி எண்ணெய், பிரபஞ்சனம் எண்ணெய், விஷமுஷ்டி எண்ணெய், விஷக் கர்ப்ப எண்ணெய் போன்ற வற்றைத்

தேய்த்து ஆவி பிடிக்கவோ அல்லது எண்ணெயைப் பஞ்சில் முக்கி வைக்கவோ செய்வார்கள். அதன் பின் கார்ப்பா ஸாஸ்தியாதி எண்ணெயை மூக்கில் இரண்டு சொட்டு விடுவார்கள்.
வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?
பின்பு துணியில் மருந்துகளைக் கிழியாகக் கட்டி ஒத்தடம் கொடுப்பார்கள். உள்ளுக்கு மாவிலங்கப்பட்டை கஷாயமாகிய வருணாதி கஷாயம், தசமூலக் கஷாயம், ராஸ்னாபஞ்சகம் கஷாயம்,

ஆபாகுக்குலு, யோகராஜ குக்குலு, தான்வந்தர தைலம் வஸ்தி பாகம் போன்றவை கொடுப்பதுண்டு, 

பூண்டு பால் கஷாயமும் கொடுப்பதுண்டு, தலையில் எண்ணெயை அக்குபங்சர் வைக்கிற சிரோ வஸ்தி போன்ற சிகிச்சைகளும் இதற்குச் செய்வதுண்டு. வலி சற்றுக் குறைந்த பிறகு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம்.

யாருக்கு அதிகமாக வரும்?
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
சிலருக்குக் குடும்பத்திலேயே கழுத்து வலி வருவதுண்டு. புகை பிடிப்பவர்களுக்கு, கணினியில் வேலை செய்பவர்களுக்கு, கண்டக்டர் வேலை செய்பவர்களுக்கு, மனச் சோகம் உடையவர் களுக்கு இது வரலாம்.

பொதுவாக 8 வார சிகிச்சையில் 95 சதவீதம் பலன் கிடைக்கும். சிலர் மென்மையான காலர்கள் (கழுத்துப் பட்டை) அணிவதுண்டு.
பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
இது கழுத்தின் அசைவைக் கட்டுப்படுத்தும். கழுத்துக்கு ஓய்வு கிடைக்கும். இதைக் குறுகிய காலத்துக்குப் பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் தசைகளின் வலுவை இழக்கச் செய்து விடும்.
(nextPage)
எளிய தற்காப்பு முறைகள்

உயரமான தலையணை வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளவர் களுக்குப் பெரும்பாலும் இந்தக் கழுத்து வலி வருவதாகக் கூறப்படுகிறது. 
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
எனவே, கழுத்து வலி வந்தால், முதலில் தலையணை வைத்துத் தூங்குவதை நிறுத்துங்கள். சமதளமான தரையில் பாய் விரித்துத் தூங்குங்கள்.

நொச்சி இலையை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, அதைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்கலாம். வாதமடக்கி (வாத நாராயணன்) இலையைக் கொதிக்க வைத்து உடம்புக்கு ஊற்றலாம்.
அட தமிழ் உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணியா?
அமுக்கராக் கிழங்கைத் தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்துக் கொதிக்க வைத்துக் கழுத்தில் பற்றுப் போட்டு வந்தால், கழுத்து வலி குறையும். 

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வந்தால் கழுத்து வலி குறையும். 

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சிறிது நேரம் எழுந்து நடந்த பின் வேலை செய்யலாம்.
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதற்குரிய அறிகுறி !
குறிப்பாக, கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்த பின் வேலையைத் தொடர்வது நல்லது. வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வலுவான எலும்புகளுக்கு சாப்பிட வெண்டியது
முடிந்தவரை குறைந்த தொலைவுள்ள பகுதிகளுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந் திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Tags: