துபாயில் மிதக்கும் 3 அடுக்கு சொகுசு தங்குமிடங்கள் !

துபாய். துபாய் கடல் பகுதியில் கடலில் மிதக்கும் வகையில் மூன்று அடுக்குகள் கொண்ட வீடுகள் போன்ற தங்குமிடங்களை ஏற்படுத்த‌ மிதக்கும் கடற்குதிரை எனும் பெயரில்
இத்திட்டத்தை துவங்க‌ பிரபல சர்வதேச நிறுவனமான கிளைன்டைன்ஸ் ட் ( Kleindienst) திட்டமிட்டுள்ளது . இத்திட்டத்தில் 3 அடுக்குகளாக இந்த மிதக்கும் தங்குமிடங்கள் இருக்கும்

கடல் நீருக்கு அடியில் ஒரு அடுக்கும், கடல் மட்டத்தில் ஒரு அடுக்கும் மேற்புறத்தில் மற்றொரு அடுக்கும் அமைக்கப்படும் வரவேற்பரை கடலின் மேற்புறத்திலும் குளியல் அறை மற்றும் படுக்கை அறை கடலின் அடியிலும் இருக்கும்

மேலும் கீழ்தளத்தில் படுக்கையறையிலிருந்து பவள பாறைகள், மீன்களை  ரசிக்கும் வகையிலும் 2016ல் இறுதிக்குள் இத்திட்டம் செயலபடுத்தப்பட உள்ளது.

கிளைன்டைன்ஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜோசப் கூறுகையில் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் என பல மாதங்களாக இத்திட்டம் பற்றி ஆய்வு செய்துள்ளோம்.

இது ஒரு புதுமையான திட்டம் உலகம் முழுவதும் இது பெறும் வரவேற்பை பெறும் புதிய மைல்கல் என்று நம்புகிறோம் என்றார்.
Tags:
Privacy and cookie settings