தேங்காய் உடைத்த பிறகு வெளியே வைத்தால் என்ன ஆகும்?

தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர் சாதனத்தில் வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?. அப்படி யானால் லட்சக் கணக்கான தேங்காயை உடைத்து வியாபாரிகள் எப்படி பயன் படுத்து வார்கள்? 
தேங்காய் உடைத்த பிறகு


தேங்காய் எண்ணை தயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப்படுத்த இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும். 

நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்ல தரமான கொப்பரை இருந்தால்தானே சுத்தமான தேங்காய் எண்ணை கிடைக்கும்?

ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்? எப்படியும் செய்யலாம்? என்ற சிந்தனை அரசியல் வாதிகளிடம் இருந்து வியாபாரி களுக்கும் பரவியதால் கொப்பரை யில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்பு வைக்கிறார்கள். 

தேங்காய் விலை ஏறும் காலத்தில் இவர்களுக்கு விலை அதிகமாக கிடைக்க இந்த முறை பயன் படுகிறது. சபரி மலை ஐயப்பன் கோவிலில் வெடி வழிபாடு நடக்கும். கோடிக் கணக்கான தேங்காய் உடைத்து வழிபாடும் நடக்கும். 

கீழே கொண்டு போய் சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்க காலதாமதம் ஆகும். 

அதனால் வெடி வழிபாடு செய்யும் இடத்திலேயே கந்தகம் (SULPHUR) பூசப் படுகிறது. கந்தகத்தால் பாதுகாக்கப்பட்ட கொப்பரைகள் பல மாதங்களானாலும் ஒன்றும் ஆகாது. 

ஒரு பொருளில் புழு வந்தாலோ, வண்டு வந்தாலோ, பூசனம் பூத்தாலோ உயிர்த் தன்மை இருக்கும். 

புழு, பூச்சி சாப்பிட்டது போக மீதி கிடைப்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நியதி. ஆனால் நமக்கு இரண்டு வருடம் ஆனாலும் ஹார்லிக்ஸ் மாதிரி கெடாமல் இருக்கணும். 

அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான் கெடாது. கெமிக்கலில் முக்கினால் என்னவாகும்!? கொப்பரையில் உள்ள அமில கந்தகம் உடம்புக்குள் போனால் என்னவாகும்? கேன்சர் வரும்.
ரத்த கொதிப்பு


வயிறு கோளாறு வரும்.

ரத்த ஓட்டம் அதிகரித்து ரத்தக் கொதிப்பு வரும்.

சுரப்பிகள் சீர் கெட்டு நீரிழிவு நோய் வரும்.

உடல் பருமன் மாறுபடும். கிட்ணி பழுதடையும்.

இருதய துடிப்பு எண்ணிக்கை மாறுபடும்.

புத்தி வேறுபடும்.

சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும். சரி.இதோடு போனால் பரவாயில்லை. 

தேங்காய் விலை உயர்வு. எள் விலை உயர்வு. கடலை விலை உயர்வு. சூரியகாந்தி விதை உற்பத்தி குறைவு. 

இதனால் எண்ணெய் விலைகள் கடும் விலை உயர வேண்டும். ஆனால் அப்படி உயராமல் விலை குறைவாகதான் உள்ளது.
Tags: