அச்சு அசலாக இருக்கும் குழந்தைகளை அடையாளம் காண !

அச்சுவார்த்தாற் போல் மூன்று குழந்தைகள் பிறந்தால் அடையாளம் காண்பது தொடர்பான ரகசியத்தை இங்கிலாந்து தம்பதி உலகுக்கு பகிர்ந்துள்ளனர்.
அச்சு அசலாக இருக்கும் குழந்தைகளை அடையாளம் காண !
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கரேன்-இயன் கில்பர்ட் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், மூன்று குழந்தை கருவில் இருப்பது கேட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர்.

இரட்டைக் குழந்தைகள் பிறக்க சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று, இரண்டு கரு முட்டைகள் கர்ப்பப் பையிலேயே தங்கி, அது தனித்தனியாக இரண்டு விந்துக்களுடன் ஒவ்வொன்றாக இணைவது.

இது போன்ற, பொதுவான பல கருத்துக்களை முறியடித்துவிட்டு ஒரே முட்டையில் மூன்று விந்தணுக்கள் இணைந்து உருவான மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு பிறந்தன.

தற்போது இரண்டு வயதாகும், அந்த மூன்று பெண் குழந்தைகளும் சின்ன மாற்றம் கூட இன்றி ஒன்று போல் தோன்றுவது 
 
மற்றவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் அவ்வப்போது குழப்பம் தருவதாக கரேன் தம்பதி கூறுகின்றனர்.

கரேன் தம்பதி ஃபிஃபியான், மேடிசன் மற்றும் பெய்ஜ் எனும் அந்த மூன்று குழந்தைகளுக்கும் காலில், வண்ண நக பூச்சு பூசி அடையாளம் காணுகின்றனர்.
தற்போது சின்னத்திரையில் தோன்றும் இந்த இளம் நடிகையர், ஒரே மாதிரி இருப்பதால், ஒரு குழந்தை சோர்வடைந்தால் மற்றொன்று என மாறி மாறி நடிக்க வைக்கப்படுகின்றனர்.

இதுபோன்று வெளியே போகும் வேளையில் அந்த குழந்தைகளுக்கு வெவ்வேறு நிறத்தில் ஷூக்களை மாற்றி அடையாளம் காணுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings