வாழப் பழகுங்கள் சிகரத்தை தொட !

சாதனை யாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சி களை கட்டுப் படுத்தி
தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டு மல்லாமல், 


தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்து கின்றனர்.

சாதனை யாளர்களிட மிருந்து கவனிக்க ப்பட்ட 8 பழக்கங் களை இங்கே பார்ப்போம்.

அந்த பழக்கங்களை நாமும் கற்றுக் கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.

1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக் கூடாது

சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதற விடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள்.

ஒரே நேரத்தில் பல பிரச்சனை களை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. 

அதனால் மற்ற பிரச்சனை களை பிறகு பார்த்துக் கொள்வது தான் நல்லது.

எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள், 

கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனை களை யோசித்து கவலைக் கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்!


2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்;

நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரி க்கை நடவடிக்கை களை எடுத்து கொள்ள வேண்டும்,

நம்முடைய செயல்கள் சரியான இலக்கை அடைய  விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிக முக்கிய மானதாகும்.

நம்முடைய எல்லா பிரச்சனைகளை பற்றி கவலை அடைவதே நம மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது.

3) போராடுங்கள், விட்டு கொடுக்க கூடாது!

ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக எல்லா செயல்களும் நடப்பது போல் அமையும்.

அந்த நேரத்தில் மனதை தளர விடாமல் போராடி நமது இலக்கை அடைய வேண்டும்.

இந்த மனப்பக்குவமே சாதனை யாளர்கள் மற்றும் சாதனை யற்றவர்களை வேறு படுத்திக் காட்டுகிறது.

4) மற்றொரு கோணத்தில் பாருங்கள்!

ஒரு பிரச்சினை நம்மை சூழ்ந்திருக்கும் போது, சில நேரங்களில் அது பெரியதாக தோன்றும்.

அந்த நேரத்தில் அந்த பிரச்சனை களிலில் இருந்து விலகியிருந்து 

மற்றொரு கண்ணோட் டங்களில் பார்த்துக் கொள்வது மிக முக்கிய மானதாகும்.


எனவே பிரச்சனைகள் எழும்போது நாம் அமைதியாக தூங்கி எழுந்தால் அந்த பிரச்சனைகள் மிக எளியதாக தோன்றும். 

மற்றொரு கண்ணோட்ட த்தில் பிரச்சனை களை பார்ப்பதன் மூலம் புதிய கோணத்தில் அதற்கொரு முடிவு கிடைக்கிறது.

5) எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்; தயாராக இருக்க வேண்டும்.

சிறந்த வாசிப்பு, புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர் வோடு இருக்க வேண்டும்.

மேலும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால்,

மன அழுத்த காலங்களில் அதை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

6) அன்புக் குரியவர் களுடன் நேரத்தை செலவிடுங்கள்

நீங்கள் ஓய்வெடுக்கவும் மற்றும் உங்களின் அன்புக்கு ரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். 

உங்களுடைய நம்பிக்கை உரியவர்களிடம் உங்களின் நேரத்தை ஒதுக்கி செலவிடுவது,


நீங்கள் ஓய்வெடுத்து கிடைப்பதை விட மிக நிறைவாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கும்.

7) உறங்குதல். உடற்பயிற்சி, தியானம்

உங்களின் உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்து மூளையை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மன நிலைகளை நிர்வகிப்பதில் தூக்கம் முக்கிய மானதாகும். 
உங்களுடைய சுய கட்டுப்பாடு, கவனம், மற்றும் நினைவகம் ஆகியவை உங்களின் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். 

பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது, உங்களின் கண்களை மூடிக்கொண்டு,


உட்கார்ந்து, மூச்சு சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.

8) தாழ்வாக நினைப்பதை நிறுத்தவும்

நம்மளை பற்றி நாமே எதிர் மறையாக அல்லது தாழ்வாக நினைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏதாவது தவறாக சென்றாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஏனென்றால் இதோடு உலகம் முடிவதில்லை. எப்போதும் உங்களை உயர்த்தியே எண்ணுங்கள்.
Tags:
Privacy and cookie settings