வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உண்டா? கவனம் !

16 வயது.. பெண்களுக்கு ஒருவி தமான மனரீதியான ரசாயன மாற் றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. 

வெழுத்த தெல்லாம் பால் மின்னுவ தெல்லாம் பொன் என்று நினைத்து விடுகி றார்கள். இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க் கையை தொலைத்து விடுகி றார்கள். 

ஓரக்கண் ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமி ல்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு. நறுக்கு சுறுக் குன்னு ஒரு பார்வை..

உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறு நாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 

3 மாதம் கழித்து அந்த பைய னுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவி களின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாண விகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலை பேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். 

நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்ப ட்டிருக்கும் ஆபாச சுவரொட் டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்கு கிறது.

காதலன் என்ன சொன் னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலி ருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்கு களாவது பதிவாகிறது. காணாமல் போன மாண விகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்த மாணவி பேசும் வசன ங்கள் பெற்றோரை ரணமா க்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லை யேல் மண்ணோடு… 

என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து… வெயில் படாமல், மழை படாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோ ரின் பிஞ்சு மனது கனப்பதை காண முடிகிறது. 

புண்ணிய த்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க் கையை எடுத்து கூறி நம்பிக்கை யை ஏற்படுத்தி அந்தப்பெ ண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகி றார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, செல்போனும், டி.வி.யில் காட்ட ப்படும் சினிமாவும் தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. 

இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப டுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனா கிறான். 14 முதல் 16 வயதில் காதல னுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில் வரும் சில நிகழ்ச் சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக் கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்று கின்றனர்.

எம்.பி.பொ ண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானி க்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காத லர்கள் வாழ்க்கை யில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிக ளின் மனம் அலைபாய ஆரம்பி க்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல் போனிலும் தொலை பேசியிலும் மணிக் கணக்கில் காலணா வுக்கு உபயோக மில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடி விடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. 

இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதி விலக்கு! போலீஸ் நிலைய த்திற்கு வாரம் 15 புகார் களும், குறைந்த பட்சம் 10 வழக்கு களாவது பதிவு செய்யப் படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளை களின் நடவடிக் கையை தினந் தோறும் கண் காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாக வோ, தோழிக ளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. 

திடீரென புது புது ஆடைகளை அணி வதையும் முகத்தை பியூட்டி பார்லர் சென்று அழகு படுத்து வதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந் திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட் சிகளை பார்க்க அனுமதிக் காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர் த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். 

தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவ டிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறை யாவது கண்கா ணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத் துங்கள். 

காதல னுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக் கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்…

இது கல்லுரி செல்லும் மாணவி களுக்கும் பொருத்தும்
Tags:
Privacy and cookie settings