நடுரோட்டில் உயிருடன் தீ வைத்து எரித்த கொடூரம் !





நடுரோட்டில் உயிருடன் தீ வைத்து எரித்த கொடூரம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
வெனிசுலா நாட்டில் பேருந்தை திருட முயற்சி செய்ததாக புகார் கூறி வாலிபர் ஒருவரை கும்பல் ஒன்று நடுரோட்டில் உயிருடன் தீவைத்து எரித்த கொடூர காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.
நடுரோட்டில் உயிருடன் தீ வைத்து எரித்த கொடூரம் !
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் Caracas தலைநகரில் தான் இந்த கொடூரச் செயல் நடந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் பேருந்தை திருட முயற்சி செய்ததாக வாலிபர் ஒருவரை அங்குள்ள கும்பல் ஒன்று இழுத்து வந்து சாலையில் விட்டு அடித்து துவைத்துள்ளது.

பின்னர், கும்பலில் ஒருவர் வாலிபர் மீது தீவைத்து எரித்துள்ளான். தலை முழுவதும் தீப்பரவியதை தொடர்ந்து அந்த வாலிபர் வலியால் அலறி துடித்து கீழே உருள்கிறார்.

சாலையில் செல்லும் எந்த நபரும் இந்த கொடூர செயலை தடுக்க முன்வரவில்லை. சிறிது நேரம் போராடிய அந்த வாலிபர் சாலையிலேயே மயங்கி படுத்து விடுகிறார்.

வாலிபருக்கு இறுதியில் என்ன நடந்தது என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

நடுரோட்டில் நடந்த இந்த கொடூரச் செயலை நபர் ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பை கூட்டியுள்ளது.
பொது இடங்களில் சித்ரவதை செய்தவது, மரண தண்டனை நிறைவேற்றுவது தற்போது வெனிசுலாவில் அதிகரித்து வருகிறது.

இது குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் பொதுமக்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தண்டனை அளித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

வெனிசுலாவில் குற்றம் புரிந்த 10 குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே பொலிசாரால் கைது செய்யப்படுவதாகவும் ஐ.நா சபை அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Tags: