சம்பளத்திற்கு பதிலாக பெண்களின் கற்பை கொடுத்த சூடான் !

உள்நாட்டுப் போரை அடக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக அப்பாவிப் பெண்களை பந்திவைத்த தெற்கு சூடான் அரசின் அத்துமீறல்கள்
சம்பளத்திற்கு பதிலாக பெண்களின் கற்பை கொடுத்த சூடான் !
தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடந்தது.

தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள அரசுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையாக 

தண்டனை கொடுத்ததாகவும், தண்டனையின் ஒருவகையாக ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார்களின்மீது ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசுக்கு எதிராக செயல்பட்ட குடிமக்களை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டும், மரங்களில் கட்டி தொங்கவிட்டும், விஷவாயு அறையில் அடைத்தும் கொடூரமாக கொன்று குவித்துள்ளனர்.
இந்த கொடூர செயலின் உச்சக்கட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்துள்ளது. அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை அடக்க ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.

ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக அந்நாட்டு அரசாங்கம் கொடூரமான அனுமதியை அளித்துள்ளது.

சம்பளத்திற்கு பதிலாக ராணுவ வீரர்கள் அந்நாட்டு பெண்களை கற்பழித்துக்கொள்ளலாம் என அரசாங்கமே அனுமதி அளித்ததாக இந்த விசாரணை அறிக்கையில் ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.

உதாரணத்திற்கு, தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களில் யுனைட்டி ஸ்டேட் என்ற மாகாணம் ஒன்றாகும்.

இந்த ஒருமாகாணத்தில் மட்டும் சுமார் 1,300 பெண்கள் ராணுவ வீரர்களின் கற்பழிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என ஐ.நா.சபை புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களையும் ஒப்பிட்டு கணக்கிட்டால், இந்தப் புள்ளிவிபரம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற அச்சத்தையும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் யுனைட்டி ஸ்டேட் மாகாணத்தில் மட்டும் 10,553 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 

இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான செய்த் ராத் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings