நன்றி கடனுக்காக தனுஷுடன் இணைகிறார் கௌதம்?

தனுஷ் இப்போது துரை செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருக்கிறார் என்று முன்பே வந்திருந்த செய்தி. 
நன்றி கடனுக்காக தனுஷுடன் இணைகிறார் கௌதம்?
அந்தச் செய்தியை, கொடி படப்பிடிப்பில் இருந்தபடியே உறுதிப் படுத்தி அதிகாரப் பூர்வமாக டிவிட்டரில் வெளியிட்டி ருக்கிறார். 

அதில், பல ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்த விசயம் முடிவுக்கு வந்திருக்கிறது, அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப்பாயும் தோட்டா என்கிற படத்தில் நடிக்கிறேன், 

கொடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க விருக்கிறது என்று சொல்லியி ருக்கிறார் தனுஷ்.
இந்தத் தகவலில் பல ஆண்டுகளாகப் பேசியது என்று தனுஷ் குறிப்பிட்டிருப்பது எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தி ருக்கிறது. 

என்ன நடந்தது? என்று விசாரித்தால், கௌதமின் அப்பா வாசுதேவ் மரண மடைந்த நேரத்தில் கௌதம் வெளிநாட்டில் இருந்தி ருக்கிறார். 

அவர் தாயகம் திரும்புகிறவரை அவருடைய அப்பாவுக்கான இறுதிச் சடங்கு வேலைகளை உடனிருந்து கவனித்துக் கொண்டவர் தனுஷ் தானாம். 

இரவு முழுவதும் தூங்காமல் தனுஷ் இருந்தார் என்கிற தகவல் தெரிந்து கௌதம் மிகவும் உருகி விட்டாராம். 
அதிலிருந்து இருவருக்குமிடையேயான நட்பு மிகவும் பலமாகி விட்டதாம். அப்போதிருந்தே இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந் தார்களாம். 

பல வருட பேச்சுகள் இப்போது தான் செயலுக்கு வந்திருக்கிறதாம். அதனால் தான் அப்படிக் குறிப்பிட்டி ருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings