புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள் !

தாய் தமிழ் உறவுகளுக்கும் கலந்துக் கொள்ளவிருக்கும் நடிகர், நடிகையர்க ளுக்கும் அன்பான வேண்டுகோள் இயக்குநர் வ.கௌதமன் சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்
புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள் !
அவர்களது துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக தாய்த்தமி ழகத்து உறவுகளுக்கும் என் திரை குடும்பத்துக் கலைஞர்களான 

நடிகர் நடிகையர் களுக்கும் 2016 புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக் குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

மழை பற்றிய வரலாற்று குறிப்பின் படி கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையை விடவும் 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழையே பெருமழை என்றும் தமிழ் மண்ணில் நடந்த பேரிடர் மழை என்றும் நீரியல் வல்லுநர் களால் வர்ணிக்க ப்படுகிறது.

மழைக்கொட்டி பெருக்கெடு த்த வெள்ளத் தால் குடிசையில் வசித்தோரு க்கு வீடே பறி போனது. வீட்டில் வசித்தோரு க்கு வீட்டிலிருந்த ஒரு பொருளும் இல்லாமல் போனது.

முதல் முறையாக நகரத்து க்கு வந்து பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வை தொடங்கிய பல்லாயிரக் கணக்கா னோர் இப்போது வீதிக்கு வந்து விட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் நாசமானது. ஏறத்தாழ தொண்ணூறு ஆயிரம் கோடிகள் இழப்பு. ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக் கிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே யிருக்கிறது.
நிதி பற்றாக் குறையால் மாநில அரசு திகைத்து நிற்கிறது. வழக்கம்போல் மத்திய அரசு பாரா முகமாக கிடக்கிறது.

பேரழிவு ஒன்று நடக்கும் போது இந்த உலகை காப்பதும் மீட்பதும் அதிகார வர்க்கங்க ளுக்கு முன் மனிதம் தான் என்பதை இந்த மண் மீண்டும் நிருபித்தது.

சாதி, மதம், இனம் பார்க்காமல் குடிநீரானா லும், உணவா னாலும், உடைகள் மற்றும் மருந்தா னாலும், வீதி வீதியாக ஊர் ஊராக உதவிகள் வந்து குவிந்தன. 

நம் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒட்டு மொத்த தமிழ் சமுகமும் மாபெரும் மனிதா பிமானத்தை பகிர்ந்து கொண்டது.

யுத்தத் தால் சிதறடிக்கப் பட்டு உலகம் முழுக்க விழுந்த நம் தமிழீழ உறவுகள் கூட எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாங் களும் உதவுவோம் என நிதி சேகரித்து உதவிக் கொண்டிருக் கிறார்கள்.

மற்றவர்க ளுக்கு இணை யாக நம் திரைத் துறை யினரும் முடிந்த வரை நிதிகள் தந்து உதவினர். பிறமொழி கலைஞர் களும் முதலமை ச்சர் நிவாரண நிதியாக பெருமளவு தந்தனர்.
சில கலைஞர்கள் தங்களது புகழையும், பொருளையும் பார்க்காமல் சிரமத்தையும் பொருட்படு த்தாமல் நேரில் சென்று பணிவிடை செய்தனர். ஆனால் இன்னும் நம் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்க வில்லை. 

ஒரு நிரந்தர தீர் வில்லை. நடந்து முடிந்த சிதைவு களை வைத்தே கொண்டாட் டம் வேண்டா மென கிருஸ்துமஸ் நிகழ்வையே ரத்து செய்திரு க்கிறது தமிழ்நாடு அரசு.

வருமான த்தை பிரதான மாக கருதும் இன்றைய கால கட்டத்தில் தமிழ்நாடு ஒட்டல் கள் சங்கம் தங்களது விடுதிகளில் நடக்க விருந்த புத்தாண்டு கொண்டாட் டங்களை ரத்து செய்து விட்டு

அதற்கு பதிலாக பாதிக்கப் பட்டவர் களுக்கு பணி விடை செய்யப் போகிறோம் என பத்தாயிரத்தி ற்கும் மேற்பட்ட முதலாளி கள் ஒன்றுகூடி பெருந்தன்மை யோடு அறிவித் திருக்கி றார்கள்.

ஜன்னலை திறந்து தாய்மனதோடு பாருங்கள். ஒரு பெரும் கூட்டம் படுக்க பாய்கூட இல்லாமல் அலைந்து கொண்டிரு க்கிறது. மாற்று உடுப்புக்கும், மறு வேளை உணவுக்கும் வழியில் லாமல் பல்லாயிரக் கணக்கா னவர்கள் திரிந்துக் கொண்டிரு க்கையில்,

ஒரு வேளை அலைந்து திரியும் அந்த கூட்டத்தில் நாமோ அல்லது நம் குடும்பத்து உறுப்பின ர்களோ நின்றிருந்தால் எப்படி இருக்கும் என 

ஒரு முறை கற்பனை செய்து பார்த்தாலே தாங்க முடியாமல் நெஞ்சம் வெடித்து விடும். எனது வேண்டுகோள் எல்லோருக் குமானது அல்ல. 
இந்த துயரங்கள் எதனையும் உள்வாங்காமல் புத்தாண்டு கொண்டாட்ட திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் என் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் என் திரைக் குடும்பத்தை சார்ந்த ஒரு சில கலைஞர் களுக்கும் தான். 

இதற்கான செலவு செய்ய ஏதோ ஒரு தொகையினை இந்நேரம் நீங்கள் கணக்கிட்டு ருப்பீர்கள். உங்களால் முடிந்தால் ஒரு நபரையோ அல்லது ஒரு குடும்பத் தையோ கரையேற்றினால் காலம் முழுக்க உங்களை அவர்கள் வாழ்த்து வார்கள். 

பிறப்பின் அற்புதமே ஒரு உயிர் இன்னொரு உயிரை மகிழ்வி ப்பது தான் என்பதை செயலால் உண ர்வோம்... மனிதத்தை உயர்த்து வோம்.
Tags:
Privacy and cookie settings